ரிலைன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கு அவரது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சத்துக்கும் ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை குஜராத் ஜாம் நகர் பகுதியில் பிரமாண்டமாக நடத்தினார்.
ரஜினிகாந்த், அமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான், போனி கபூர், போன்ற பிரபலங்களை அழைத்து வர பிரைவேட் ஜெட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை தொடர்ந்து, ராதிகா மெர்ச்சண்ட்டின் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் ஜான்வி கபூர். இதில் ராதிகாவின் தோழிகள், மற்றும் ஆனந்த் அம்பானிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.
ராதிகா வெள்ளை நீர் நைட் டிரஸ் அணைந்து... தலையில் கிரோன் ஒன்றையும் வைத்துள்ளார். இந்த சிலம்பர் பார்ட்டியில் அம்பானியின் மூத்த மருமகளும் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.