பொதுவாகவே, நாம் சாப்பிடும் உணவில் இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில், புரதமானது நமது உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதனால்தான் உடலை வலுவாக வைத்திருக்க அதிக புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அந்தவகையில், சைவ உணவு உண்பவர்களுக்கு புரதம் கிடைப்பது கடினம். ஆனால், காராமணி பருப்பு, சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு வரமாக கருதப்படுகிறது. ஆம், பல காய்கறிகள், பால், முட்டை மற்றும் கோழியை விட பல மடங்கு அதிக புரதம் இதில் உள்ளது. இது புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். மேலும் புரதத்தைத் தவிர, இந்த பருப்பு பல ஊட்டச்சத்துக்களின் புதையல் என்று கூட சொல்லலாம்..
இதில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து வயிற்று ஆரோக்கியத்திற்கு ஒரு வரமாக கருதப்படுகிறது. ஏனெனில், செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பருப்பு சிறந்த மருந்து என்று கூட சொல்லலாம். காராமணி பருப்பு, அனைத்து அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளதால், இது நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்கும்.
இதையும் படிங்க: Health tips: குளிர்காலத்தில் நிறைய பட்டாணி சாப்பிடுங்கள்- அடுத்து நடக்கும் அற்புதம்..!!
காராமணி பருப்பில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. இதில் பல சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், அவை நமது செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் ஏராளமான கால்சியம் இருப்பதால், அவை எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: பச்சை பட்டாணி ஃபிரீசரில் வைக்கலாமா? கூடாதா?
அதுமட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் தினமும் இந்த பருப்பை அவித்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பெரிதும் உதவும். அதுபோல், உடல் எடையை குறைக்க நினைப்பார்கள் காராமணி பரப்பை தங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D