நடிகை அமலா பாலின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இவர் கடந்த 2013-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களது திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். அமலா பாலை விவாகரத்து செய்து பிரிந்த அடுத்த சில ஆண்டுகளில் இயக்குனர் ஏ.எல்.விஜய் மறுமணம் செய்துகொண்டார்.
திருமணமான இரண்டே மாதங்களில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்ட அமலா பால், அடிக்கடி கர்ப்பகால போட்டோஷூட்டையும் நடத்தி வருகிறார். அண்மையில் நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு நடைபெற்றது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், இந்த கர்ப்ப காலத்தில் தனது கணவர் ஜெகத் தேசாய் தனக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்தார் என்பதை பற்றி நெகிழ்ச்சி உடன் பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது : “தாமதமான இரவுகளிலும் என் பக்கத்தில் நீ இருந்தாய். என் அசௌகரியங்களை மெது மெதுவாகத் தணித்து, என் மீதான உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் எனக்கு தெம்பூட்டும் உங்களின் உற்சாகமான வார்த்தைகள் வரை, இந்த விலைமதிப்பற்ற கர்ப்ப கால பயணத்தின் போது எனக்கு பக்கபலமாக இருந்ததற்கு நன்றி.
என் நம்பிக்கை குலைந்த சின்னஞ்சிறு தருணங்களில் கூட எனக்கு ஆதரவாக இருந்த நீ என் இதயத்தை நன்றியுடனும் அன்புடனும் நிரப்புகிறாய். உன்னைப் போன்ற ஒரு மனிதன் என் வாழ்க்கையில் கிடைத்ததற்கு உண்மையிலேயே நான் நன்றிக்கடன் செய்திருக்க வேண்டும். எனது நிலையான அன்பு மற்றும் அசைக்க முடியாத ஆதரவாக இருப்பதற்கு நன்றி. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... அன்று திரைப்படங்களில் நடிக்க தடை.. பிரேக் அப் ஆன நிச்சயதார்த்தம்.. ஆனா இன்று பான் இந்தியா நடிகை..