எனக்கு எந்த சம்பந்தமும் இல்லப்பா.. அதுக்கு முழுக்க முழுக்க காரணம் தனுஷ் தான்! மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

First Published Mar 12, 2024, 10:30 AM IST

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து ஓப்பனாக பேசி இருக்கிறார்.

Dhanush, Aishwarya Rajinikanth

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி, கடந்த 2022-ம் ஆண்டு திடீரென மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக இருவருமே கூட்டாக அறிவித்தனர். தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியின் இந்த முடிவு கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Aishwarya Rajinikanth about Dhanush

பின்னர் இருவரின் குடும்பத்தினரும் பேசி சமாதானப்படுத்தியதற்கு பின்னர் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டனர். இருப்பினும் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் உடனான பிரிவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன அப்படம் தோல்வியை தழுவியது.

இதையும் படியுங்கள்... 18 வருடத்துக்கு பின் ஜோடியாக நடிக்க வந்த திரிஷாவுக்கு சிரஞ்சீவி கொடுத்த காஸ்ட்லி கிப்ட்

dhanush, anirudh, Aishwarya

லால் சலாம் படத்தின் தோல்விக்கு பின்னர் பேட்டி ஒன்றை அளித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒன்று தான் அனிருத் பற்றி அவர் பேசியது. அனிருத் சினிமாவில் அறிமுகமானது ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் தான். ஆனால் அவரை அறிமுகப்படுத்தியதற்கும் தனக்கு எந்த சம்பந்தகும் இல்லை என ஓப்பனாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா. அதற்கு முழுக்க முழுக்க காரணம் தனுஷ் தான் என்றும் அவர் கூறி உள்ளார்.

Dhanush, Anirudh

அனிருத்தை அவரது பெற்றோர் வெளிநாட்டுக்கு மேற்படிப்பு படிக்க அனுப்புவதாக இருந்தார்களாம். ஆனால் அவருக்கு இருக்கும் திறமையை பார்த்து வியந்துபோன தனுஷ், தன் சொந்த செலவில் கீபோர்டு வாங்கி கொடுத்தது மட்டுமின்றி ஐஸ்வர்யாவிடம் பேசி 3 படத்தில் அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தவும் வைத்தாராம். அனிருத் சினிமாவுக்குள் வந்ததற்கு காரணம் தனுஷ், இன்று அவர் இவ்வளவு உச்சத்தை அடைந்திருப்பதற்கு காரணம் அவரது திறமை என்று ஐஸ்வர்யா கூறி இருக்கிறார். அவரின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த பேட்டியில் ஐஸ்வர்யா பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசன் கழட்டிவிட்ட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்... ஒருவழியாக தனது கடைசி பட இயக்குனரை லாக் செய்த தளபதி

click me!