விஜய் டிவியில் மிகவும் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இதில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை மணி சந்திராவும், மூன்றாவது இடத்தை மாயாவும் பிடித்தனர். இதைத் தொடர்ந்து நான்காவது இடத்தை தினேஷும், ஐந்தாவது இடத்தை விஷ்ணுவும் தக்க வைத்துக் கொண்டனர்.
அந்த வகையில் இந்த வாரம், தினேஷ், விசித்ரா, உள்ளிட்ட சிலர் கெஸ்ட்டாக கலந்து கொண்டிருந்தனர். இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடும் இந்த விளையாட்டில், விசித்ரா ஒரு அணியிலும், அதன் எதிரணியில் தினேஷ் இருந்ததாக கூறப்படுகிறது.
தினேஷ் - விசித்ராவுடன் இணைந்து விளையாட விரும்பவில்லை என்பதை நிகழ்ச்சியாளர்கள் விசித்ராவிடம் கூறிய போது, இதையே காரணமாக வைத்து ஏதேனும் பிரச்சனை எழலாம் என்கிற அச்சத்தில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக விசித்ரா கூறியுள்ளார். இது போட்டி போடும் நிகழ்ச்சி அல்ல... ஒரு ஃபன் கேம் தான் என எவ்வளவோ சொல்லியும் அதனை ஏற்றுக்கொள்ளாத விசித்ரா... தினேஷிடம் வாக்குவாதம் செய்து விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.