1000 நிராகரிப்புகள்.. டார்க் ஸ்கின்னால் சந்தித்த அவமானம்.. உச்ச நடிகருடன் லிப்லாக் மூலம் வைரலான நடிகை..
First Published Jun 22, 2024, 4:05 PM ISTதனது வாழ்க்கையில் சந்தித்த நிராகரிப்புகள் குறித்து பிரபல நடிகை மனம் திறந்து பேசி உள்ளார்.
தனது வாழ்க்கையில் சந்தித்த நிராகரிப்புகள் குறித்து பிரபல நடிகை மனம் திறந்து பேசி உள்ளார்.
திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது. பிரபலங்களில் குழந்தைகள் என்ற ஒரே காரணத்திற்கு இவர்களுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. குறிப்பாக வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் பாலிவுட்டில் எந்த சினிமா பின்புலமும் இல்லாத நபர் நுழைவது எவ்வளவு கடினம் என்பதை பலரும் நேரடியாக அனுபவித்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த சவால்களை பொருட்படுத்தாமல் சில நடிகர், நடிகைகள் வெற்றி பாதையை கண்டுபிடித்து தற்போது திரையுலகில் வலம் வருகின்றனர். ஆனால் இன்று, 1000 முறைக்கு மேல் நிராகரிக்கப்பட்ட நடிகை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அவர் வேறு யாருமில்லை. நடிகை ஷோபிதா துலிபாலா தான்.. 2010-ல் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் 2013 மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டியாளராக இருந்தார், அந்த நேரத்தில் அதுவே அவரது மிகப் பெரிய புகழைப் பெற்றது.
எண்ணற்ற நிராகரிப்புகளை எதிர்கொண்ட காலம் குறித்து பேசிய சோபிதா துலிபாலா, " திரையுலகிற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனது ஆடிஷன் மூலம் திரையுலகில் நுழைவது மட்டுமே எனக்கு ஒரே வழி.. நான் கொஞ்சம் மாடலிங் செய்தேன். மாடலாக, நீங்கள் விளம்பரங்களுக்கான ஆடிஷன்களையும் செய்தென்... ஆனால் நான் மூன்று வருடங்கள் ஆடிஷன் மட்டுமே செய்து கொடுத்தேன், நான் என் வாழ்க்கையில் 1,000 ஆடிஷன் செய்திருப்பேன்” என்று கூறினார்.
சோபிதா துலிபாலா பாலிவுட்டில் ஒரு தைரியமான மற்றும் வெளிப்படையான நடிகையாக கருதப்படுகிறார். அவர் மிகக் குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார் மற்றும் அனில் கபூர், நவாசுதீன் சித்திக் மற்றும் விக்கி கௌஷல் போன்ற பல நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அதிக சம்பளம் வாங்கும் OTT நட்சத்திரங்களில் இவரும் ஒருவர்.
அவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'மேட் இன் ஹெவன்', 'பொன்னியின் செல்வன் 1', 'பொன்னியின் செல்வன்: II' மற்றும் 'தி நைட் மேனேஜர்' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
எனினும், சோபிதா துலிபாலாவின் தோலின் நிறம் காரணமாக நிராகரிக்கப்பட்ட ஒரு காலமும் இருந்தது. "நீங்கள் முதலில் தொடங்கும் போது, எல்லாமே ஒரு போர். நான் சினிமாவில் இருந்து வரவில்லை. எனது விளம்பர ஆடிஷன்களின் போது எனது நிறம் போதுமானதாக இல்லை என்று பல முறை கூறியது எனக்கு நினைவிருக்கிறது. நான் அழகாக இல்லை என்று என் முகத்தில் நேரடியாகச் சொல்லப்பட்டது." என்று அவர் ஒருமுறை பேட்டியில் கூறினார்.
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ராமன் ராகவ் 2.0' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சோபிதா துலிபாலா. இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும், வசூல் ரீதியாக சுமாரான வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தெலுங்கு மலையாளத்தில் வெற்றி படங்களில் நடித்ததால் பிசியான நடிகையாக மாறினார்.
பின்னர் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கிய அவருக்கு 'மேட் இன் ஹெவன்' என்ற வெப் சீரிஸ் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 'தி நைட் மேனேஜர்' என்ற வெப் சீரிஸ் மூலம் அவர் பிரபலமானார். இந்த வெப் சீரிஸில் பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் அனில் கபூருக்கு ஜோடியாக நடித்தார். இந்தத் தொடரில் அனில் கபூருடன் அவரது கெமிஸ்ட்ரி, அவருடனான முத்தக் காட்சிகள் வைரலானது.
சோபிதா துலிபாலா, ஆரம்பகால போராட்டங்கள் இருந்தபோதிலும், இப்போது திரையுல் முன்னணி நடிகையா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்று வருகிறார். தேவ் படேல் இயக்குனராக அறிமுகமாகும் 'மன்கி மேன்' படத்தில் நடிப்பதன் மூலம் சோபிதா ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
பிரபல நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா உடன் சோபிதா துலிபாலா டேட்டிங் செய்துவ வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஜோடி ஒன்றாக வெளிநாடு சென்றபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.