எல்லாமே பொய்.. இவரும் இப்படிதானா.. ஏமாற்றிய ரவீந்தர்.. கண்ணீரில் சீரியல் நடிகை மகாலட்சுமி

First Published Sep 27, 2023, 11:23 PM IST

தமிழ் சினிமா பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தர் சந்திரசேகர் மோசடி வழக்கில் கைதாகி உள்ளார். தற்போது சீரியல் நடிகை மகாலட்சுமி அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ravindar mahalakshmi

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ரூ.16 கோடி மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Film producer Ravinder Chandrasekar

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனரான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

actress mahalakshmi

அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறையில் இருக்கிறார் ரவீந்தர். மகாலட்சுமி - ரவீந்தர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பேசப்படுகிறது. நடிகை மகாலட்சுமி - ரவீந்தர் ஜோடி தங்களின் முதலாமாண்டு திருமண நாளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கொண்டாடியது.

producer ravindar abd actress mahalakshmi

சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி பாலாஜி என்பவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

ravindar and mahalakshmi

மத்திய குற்றபிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ரவீந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்று மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி மோசடி செய்திருப்பதாக போலீஸ் தகவல் தெரிவித்தனர்.

ravindar chandrasekaran

ரவீந்தர் சிக்கலில் சிக்கியிருப்பது குறித்து மிகவும் மன உலைச்சலில் நடிகை மகாலட்சுமி இருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு எப்போது ஜாமீன் கிடைக்கும் என்று அவர்களது தரப்பினர் எதிர்பார்த்து கிடக்கின்றனர்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

click me!