ரஜினியின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்.. வைரல் போட்டோஸ்..

First Published Mar 12, 2024, 4:29 PM IST

நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

புதிய திரைப்படங்கள் வெளியீடு, அல்லது வேண்டுதலை நிறைவேற்றுதல் பண்டிகை தினங்கள், பிறந்தநாள் என பல விசேஷ நாட்களுக்கு திரைப்பிரபலலங்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்வது வழக்கம். அப்படி அவர்கள் திருப்பதிக்கு செல்லும் போது அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சௌந்தர்யாவின் கணவர் விசாகன் வணங்காமுடி மற்றும் 2 குழந்தைகளும் அவருடன் சென்றிருந்தனர். விஐபி தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்த அவர்கள் ஏழுமலையான் சேவையில் வழிபாடு நடத்தினர். தரிசனம் முடிந்ததும் ஆலய ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் அவர்களுக்கு வேத ஆசி வழங்கினர்.

பின்னர் அவர்களுக்கு கோயில் அதிகாரிகள் ஸ்ரீவாரி தீர்த்தப்பிரசாதம் வழங்கி, பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செலுத்தினர். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த ரஜினி மகள்கள் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சமீபத்தில் லால் சலாம் படம் வெளியானது. ரஜினி கெஸ்ட்ரோலில் நடித்திருந்த இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், லிவிங்ஸ்டன், நிரோஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படு பிளாப் படமானது.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் மீண்டும் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது கிரிக்கெட் வீரர் கங்குலியின் பயோபிக் எனவும், இந்த படத்திலும் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

click me!