கிராமத்து பின்னணியில் திரைப்படம் எடுப்பதில் வல்லவரான, இயக்குநர் முத்தையா. விருமன், படத்தை தொடர்ந்து தன்னுடைய மகன் விஜய்யை கதாநாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். அவருடைய பாணியிலேயே கிராமத்து பின்னணியில் படமாக்கப்பட உள்ள இந்த படத்தின், கதை மதுரை மாவட்டத்தை சுற்றி நடப்பது போல் எடுக்கப்பட உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுக்க பட உள்ளது. பிரமாண்ட செட் அமைத்து இந்த படத்தின் பணிகள் பரபரப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வங்கியில் பரத் அடுத்து இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். ஒரு காலத்தில் முக்கிய ஹீரோவாக இருந்தவர், இளம் ஹீரோவுக்கு வில்லனாக நடிப்பது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.