தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராகவும், வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் அஜித்குமார். இவர் நேற்று முன்தினம் திடீர் என சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக வெளியான தகவல் திரையுலகினர் மத்தியிலும், அஜித்தின் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித் ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அஜித்தின் மேலாளர் இதற்க்கு விளக்கம் கொடுத்தார்.
அஜித் தரப்பில் இருந்து இப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னர், சமூக வலைத்தளத்தில், அஜித்திற்கு மூலையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதற்காக சுமார் 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதே போல் அஜித்துக்கு ஏற்கனவே அடிபட்ட, முதுகு தண்டுவட பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த சிகிச்சைக்கு பின்னர் நேற்று இரவே அஜித் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், இன்று இரவு அல்லது நாளை காலை அஜித் வீடு திரும்புவார் என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். இதை தொடர்ந்து அஜித் சற்று முன்னர் அஜித் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.