அயோத்திக்கு ஐஸ்வர்யா ராய் இன்றி சிங்கிளாக வந்த அபிஷேக் பச்சன் - மீண்டும் வெடித்த விவாகரத்து சர்ச்சை?

First Published Jan 22, 2024, 11:46 AM IST

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தன் மனைவி ஐஸ்வர்யா ராய் இன்றி நடிகர் அபிஷேக் பச்சன் சிங்கிளாக வந்திருந்தார்.

உலக அழகி பட்டம் வென்ற பின்னர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி கோலோச்சியவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்றார். இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், கோலிவுட்டில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் பொன்னியின் செல்வன் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அப்படத்தில் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் அசர வைத்தார். அப்படத்தின் இரண்டு பாகங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தன.

இதையும் படியுங்கள்... சினிமா.. ஈவென்ட் மேனேஜிங்.. பிராண்டிங்.. பல வகையில் வரும் பணம் - கோடீஸ்வரி ஐஸ்வர்யா ராயின் Net Worth எவ்வளவு?

பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு பின் ஐஸ்வர்யா ராய் பற்றி பல்வேறு வதந்திகள் பரவின. முதலில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. பின்னர் அது உண்மையில்லை என தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தில் மாமியார் ஜெயா பச்சன் உடன் ஏற்பட்ட சண்டையால் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அயோத்தியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் நடிகர் அபிஷேக் பச்சன் தன் மனைவியை அழைத்து வராமல் சிங்கிளாக வந்து கலந்துகொண்டுள்ளார். இதனால் அவர்கள் குறித்த விவாகரத்து சர்ச்சை பாலிவுட்டில் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. ரசிகர்கள் ஏன் ஐஸ்வர்யா ராய் வரவில்லை என கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டார் முதல் மெகாஸ்டார் வரை... அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கிற்கு படையெடுத்து வந்த சினிமா பிரபலங்கள்

click me!