உலக அழகி பட்டம் வென்ற பின்னர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி கோலோச்சியவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்றார். இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.
பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு பின் ஐஸ்வர்யா ராய் பற்றி பல்வேறு வதந்திகள் பரவின. முதலில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. பின்னர் அது உண்மையில்லை என தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தில் மாமியார் ஜெயா பச்சன் உடன் ஏற்பட்ட சண்டையால் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக கூறப்பட்டது.