Abhirami: பச்சை நிற மடிசாரில் அய்யர் ஆத்து மணமகளாக மாறிய அபிராமி வெங்கடாச்சலம்! கல்யாண கலை வந்துடுச்சு!

First Published Jun 14, 2024, 11:20 PM IST

நடிகை அபிராமி வெங்கடாச்சலம், மடிசார் கட்டி தற்போது போட்டோ ஷூட் செய்துள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

பரதநாட்டிய கலைஞரான அபிராமி வெங்கடாச்சலம், தன்னுடைய இளம் வயதிலேயே மாடலிங் துறையை தேர்வு செய்து மாடலிங் பண்ண துவங்கினார். சிறு வயதில் இருந்தே இவரின் அம்மா இவரை ஒரு சிங்கிள் பேரெண்ட்டாக இருந்து வளர்த்து வந்ததால், குடும்ப சூழ்நிலைக்காக இவரும் மாடலிங் செய்து கொண்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தான் கல்லூரி படிப்பை முடித்தார்.

மாடலிங் அனுபவத்தை வைத்து திரைப்படங்களில் நடிக்க இவர் வாய்ப்பு தேடிய போதெல்லாம்... பல ரிஜெக்க்ஷனை சந்தித்தார். ஆனால் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு எடுத்துக்காட்டாக இவருக்கு தல அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

”கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” - டீசர் வெளியீட்டு விழாவில் மோகன் பாபு நெகிழ்ச்சி!

Latest Videos


இந்த படம் வெளியான பின்னர் அபிராமியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் சில படங்களில் நடித்த போதிலும், இதுவரை கண்டுகொள்ளப்படாத நடிகையாக உள்ளார்.

அவ்வப்போது விதவிதமான உடையில், போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள அபிராமி, தற்போது மடிசார் கட்டிய மாமியாக மாறியுள்ளார்.

Tamannaah: நான் ரொம்ப பிசி! தோழா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்த பிரபல நடிகை!

பச்சை நிற மடிசாரில், அதற்க்கு மேட்சிங்காக கழுத்தில் சொக்கர், ஆரம், ஒட்டியாணம், நெத்தி சூட்டி சூரியன் - சந்திரன் பிறை என பிராமின் மணமகள் போல் இருக்கிறார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!