"ஒரு நாள் முழுக்க குதிரையிலிருந்து பயிற்சி எடுத்தார்" விக்ரமின் டெடிக்கேஷனை பகிர்ந்த நிழல்கள் ரவி!

First Published Jul 10, 2022, 1:10 PM IST

சமீபத்திய பேட்டியில் பிரபல நடிகர் நிழல்கள் ரவி, விக்ரமின் டெடிகேஷன் குறித்து கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vikram

பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார.

மேலும் செய்திகளுக்கு...வேஷ்டி, அணியவேண்டாம்.. கட்டளையிட்ட மணிரத்னம்.. புது குண்டை போட்ட ப்ளூசட்டை மாறன்!

இவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட பின் நலமுடன் இருப்பதாகவும் அவரது மேலாளர் மற்றும் மருத்துவமனை சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதை அடுத்து விக்ரம் தற்போது நடித்து வரும் கோப்ரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் விக்ரம் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்ரம் குறித்து பிரபல நடிகர் பேசி உள்ளது வைரல் ஆகி வருகிறது.

Vikram

நிழல்கள் ரவி தான் தற்போது விக்ரம் குறித்து பேசி உள்ளார். ஆதித்ய கரிகாலனாக நடித்த வருகிறார் விக்ரம். சுந்தர சோழனின் ஆட்சியில் பட்டத்து இளவரசனாகவும், வடக்குப் படைகளின் தளபதியாகவும் இருந்தவர் ஆதித்ய கரிகாலன். இவர் சுந்தர சோழனின் மூத்த மகன் அருண்மொழிவர்மன் மற்றும் குந்தவையின் மூத்த சகோதரர் ஆவார். இந்த ரோல் குறித்தான விக்ரமின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது அதில் குதிரை மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் சீயானை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...குடும்பத்துடன் வாழ்த்து சொன்ன சூர்யா, விஜய்சேதுபதி.. நட்சத்திர பெருவிழாவாக நயன் - விக்கி வெட்டிங் ..

இவர் குறித்து சமீபத்திய பேட்டியில் பிரபல நடிகர் நிழல்கள் ரவி, விக்ரமின் டெடிகேஷன் குறித்து கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது  நடிகர் விக்ரம் காலை 7:30 மணிக்கு குதிரையில் ஏறி அன்றைய நாள் முழுவதும் டயலாக்குகளை பேசி மாலை ஐந்து மணிக்கு தான் இறங்கினார். அதுதான் அவருடைய டெடிகேஷன் என்று கூறியுள்ளா.ர் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !

vikram

பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக சமீபத்தில் வெளியான டீசர் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் கட்டாயம் நல்ல வரவேற்பு பெரும் எனும் நம்பிக்கையில் படக்குழுவினரும், ரசிகர்களும் உள்ளனர். இதில் கார்த்தி ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட தமிழின் முக்கிய பிரபலங்களும் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நாயகிகளும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் குறித்தான போஸ்டர்களும் சமீபத்தில் வெளியாகின.

click me!