சினிமாவை போல சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன்காரணமாகவே முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் இப்போது வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு சீரியல்களுக்கான மவுசு கூடி விட்டது. தற்போது சினிமா ரேஞ்சுக்கு விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல்கள் உள்ளதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பிப் பார்க்கின்றனர்.