இரண்டாவது இடத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியில் துவங்கப்பட்ட 'மூன்று முடிச்சு' தொடர் கைப்பற்றி உள்ளது. தன்னுடைய அம்மாவால் காதல் வாழ்க்கை அழிந்து போக... ஹீரோ சூர்யா குடிகாரனாக மாறுகிறார். தன்னுடைய அம்மாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, மினிஸ்டர் பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தின் போது, தன் வீட்டு தோட்டத்தில் வேலை செய்து வந்த, நந்தினியை திருமணம் செய்து கொள்கிறார். நந்தினியை வீட்டை விட்டு அனுப்ப நினைக்கும் மாமியார் மத்தியில் நந்தினி தன் வாழ்க்கையை தக்கவைத்து கொள்வாரா? என்கிற கேள்வியுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதை தொடர்ந்து, டி ஆர் பி ரேட்டிங்கில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது 'சிங்க பெண்ணே' சீரியல். கடந்த சில மாதங்களாக, டிஆர்பிஎல் பின் தங்கியுள்ள இந்த தொடர், இந்த வாரம் 8 .90 TRP புள்ளிகளை கைப்பற்றி உள்ளது. ஆனந்தி ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது அன்பு வீட்டில் அவரின் அம்மாவுக்கு தெரியாமல் இருந்து வருகிறார். இந்த விஷயம் வெளியே வந்த எப்படிப்பட்ட பூகம்பம் வெடிக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, ஆனந்தி தன்னை அறியாமலேயே... அன்புவை நெருங்கி வருவதால், அன்புவை காதலிக்க துவங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
3 பழைய சீரியல்களை பேக்கப் பண்ணிவிட்டு... அடுத்தடுத்து 4 புதிய சீரியல்களை களமிறக்கும் சன் டிவி!