சமந்தாவிற்கு இனிமேல் பின்னணி குரல் கொடுக்க மாட்டேன்...அடம்பிடிக்கும் பிரபல பாடகி

First Published Sep 6, 2022, 8:41 AM IST

சமீபத்தில் தான் சின்மயி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். இதனால் மெல்ல மெல்ல திரையுலகில் இருந்து ஒதுங்கும் நோக்கத்தில் அவர் இது போன்ற முடிவுகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

samantha

தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் நடித்திருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக் பாஸ்டர் படமாக அமைந்தது. இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.

samantha

தற்போது இவர் நடிப்பில் குஷி, யசோதா , சாகுந்தலம் ஆகிய படங்கள் திரைக்கு வர காத்திருக்கிறது. இதற்கிடையே தனது காதல் கணவர் நாகா சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் உருமாற்றம், மனமாற்றம் இரண்டையும் செய்து கொண்ட சமந்தா. முன்பே விட அதிக கவர்ச்சியுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...உலகளவில் மாஸ் காட்டிய திருச்சிற்றம்பலம்..தனுஷ் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

samantha

இதற்காக தனது உடலை கட்டுலாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள இவர் அவ்வப்போது ஜிம்மில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களிடம் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார். ஹாலிவுட்டில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் களமிறங்கிய இவருக்கு அங்கும் அதிக வரவேற்பு உண்டு. சமீபத்தில் புஷ்பா படத்தில் ஓ சொல்ரியா மாமா பாடலுக்கு சமந்தா போட்டிருந்த நடனம் இவரை பேன் இந்தியா நாயகியாக மாற்றியது. 

மேலும் செய்திகளுக்கு...5 மொழி குரல் கொடுத்த பிரபலங்களை அறிமுகம் செய்த...பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனம்...

chinmayee

இந்நிலையில் சமந்தாவிற்கு தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்த பிரபல பாடகி சின்மயி இனிமேல் பின்னணி குரல் கொடுக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக எனது பயணம் முடிவடையும் என நினைக்கிறேன். இனிமேல் எனது நெருங்கிய தோழி சமந்தாவிற்கு பின்னணி குரல் கொடுக்க இயலாது என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...வாவ்...வாட்டர் கிராசிங்கில் மாஸ் காட்டும் அஜித்..வைரலாகும் சூப்பர் தூள் வீடியோ

chinmayee

சமீபத்தில் தான் சின்மயி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். இதனால் மெல்ல மெல்ல திரையுலகில் இருந்து ஒதுங்கும் நோக்கத்தில் அவர் இது போன்ற முடிவுகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

click me!