விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்கும் சமந்தா - நாகசைதன்யா ஜோடி? சமூக வலைத்தளத்தில் வைரலாகும் தகவல்!

First Published Nov 12, 2022, 11:26 AM IST

சமந்தா -  நாகசைதன்யா ஜோடி, கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் தற்போது மீண்டும் இவர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
 

நடிகை சமந்தா தெலுங்கில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த  2010 ஆம் ஆண்டு அறிமுகமான Ye Maaya Chesave படத்தில், நடிகர் நாகசைதன்யாவுடன் இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. சில வருடங்கள் டேட்டிங் செய்த இந்த ஜோடி... கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.
 

திருமணத்திற்கு பின்னரும், சமந்தா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நிலையில், இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது என கூறலாம். மேலும் பல நடிகைகள் ஏற்று நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை கூட, 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஏற்று நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார் சமந்தா.

Malavika Mohanan : உடலழகை அப்பட்டமாக காட்டும் டைட் உடையில்... மெர்சலாக்கிய மாளவிகா மோகனன் ஹாட் போட்டோ ஷூட்..!
 

திரையுலக வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த நிலையில்... திடீர் என தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து, சமந்தா தன்னுடைய குடும்ப பெயரான அக்கினேனி என்கிற பெயரை நீக்கினார். இதனால் இவர்கள் இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியான... ஆனால் இவருமே இது குறித்து வாய் திறக்காத நிலையில் திடீர் என கடந்த ஆண்டு சமூக வலைத்தளத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.

விவாகரத்துக்கு பின்னர், இவர்களுடைய பிரிவுக்கு காரணம் என்ன என்று சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய விவாதமே சென்றது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவியது. இதற்க்கு சமந்தா தன்னுடைய அறிக்கை மூலம் பதிலடி கொடுத்தார்.

இளமை இதோ... இதோ! 68 வயதிலும் மூன்று அழகிகளுடன் அட்ராசிட்டி செய்யும் ஆண்டவர்! கமல்ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
 

விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர், இருவருமே தொடர்ந்து திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் நடிகை சமந்தா தனக்கு ஆட்டோ இம்மியூன் பிரச்சனை உள்ளதாக கூறி அதிர வைத்தார். அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவை அவரது முன்னாள் கணவர் நாகசைதன்யா நேரில் சென்று நலம் விசாரித்ததாகவும், அந்த சந்திப்பின் போது இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு விட்டு மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.
 

ஆனால் இந்த தகவல் வதந்தி என்றும் சமந்தா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும், விவாகரத்துக்கு பின்னர் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ஜிம்மில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சித்தாந்த்! பயிற்சியின் போது செய்ய வேண்டியது தவிர்க்க வேண்டியது என்னென்ன

நடிகை சமந்தா நடிப்பில் வாடகைத்தாய் மருத்துவ முறைகேடை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'யசோதா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலை அள்ளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!