தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், 60 ஆண்டுகால போராட்டத்துக்கு பின் தற்போது திரை வடிவம் கண்டுள்ளது. பிரம்மாண்டமாக எடுத்து முடிக்கப்பட்ட இந்த கனவு திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது.