தமிழ் சினிமாவில் கவர்ச்சியை கூட கச்சிதமாக காட்டி நடித்துவருபவர் பிரியா ஆனந்த். இவர் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், இரும்புத்திரை, அரிமா நம்பி, ஆதித்யா வர்மா, எல்.கே.ஜி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
24
கண்ட மேனிக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்வேன் என மிகவும் ஜாலியாக கொடுத்துள்ள பேட்டி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த பேட்டியில் 'நித்தியானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்தியானந்தாவை திருமணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரைக்கூட மாற்ற வேண்டியதேவையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவருக்கு அனைவரையும் சுலபமாக ஈர்க்க தெரியும் என்றும், நித்தியானந்தாவை இத்தனை பேர் பின் தொடருகிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தானே அர்த்தம்'' என்று தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார் பிரியா ஆனந்த்.