மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸான மான்ஸ்டர், 12த்மேன், புரோ டேடி ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். இதுதவிர பரோஸ் என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் மோகன்லால்.
இதையடுத்து மோகன்லால் வைத்திருந்த யானைத் தந்தங்கள் இறந்த யானையில் இருந்து எடுக்கப்பட்டவை என கேரள அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பெரும்பாவூர் நீதிமன்றத்தில் உள்ள தன்மீதான யானை தந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன்லால் மனுதாக்கல் செய்திருந்தார்.