நடிகரா மட்டும் இல்லேனா இந்நேரம் ஜெயில்ல தான் இருந்திருப்பீங்க! யானைதந்த வழக்கில் மோகன்லாலை பந்தாடிய நீதிபதிகள்

First Published Dec 8, 2022, 9:00 AM IST

மோகன்லால் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் 4 யானைத் தந்தங்கள் சிக்கியதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸான மான்ஸ்டர், 12த்மேன், புரோ டேடி ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். இதுதவிர பரோஸ் என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் மோகன்லால்.

இவ்வாறு நடிப்பு, இயக்கம் என 62 வயதிலும் செம்ம பிசியாக இருக்கும் மோகன்லால், கடந்த 2012-ம் ஆண்டு யானை தந்த வழக்கில் சிக்கினார். அந்த ஆண்டு மோகன்லால் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் 4 யானைத் தந்தங்கள் சிக்கின. இந்த தந்தங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இதையும் படியுங்கள்... கமலின் அடுத்த படம் டிராப் ஆனது? உலகநாயகனுக்காக 2 ஆண்டுகள் காத்திருந்த இயக்குனருக்கு கல்தா..!

இதையடுத்து மோகன்லால் வைத்திருந்த யானைத் தந்தங்கள் இறந்த யானையில் இருந்து எடுக்கப்பட்டவை என கேரள அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பெரும்பாவூர் நீதிமன்றத்தில் உள்ள தன்மீதான யானை தந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன்லால் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன்லால் சட்டத்தை மீறவில்லை எனவும், அது இறந்த வளர்ப்பு யானையின் தந்தம் என்றும் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு கடுப்பான நீதிபதிகள், ஒரு சாமானியனுக்கு அரசு இவ்வளவு தளர்வுகள் அளிக்குமா என கேள்வி எழுப்பியதோடு, இதுவே அவர் நடிகராக இல்லாமல் சாதாரண நடிகராக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்று பரபரப்பு கருத்தை தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டார்னா சும்மாவா! ஜப்பானில் கோடி கோடியாய் கொட்டி புரமோட் செய்தும் ரஜினி பட சாதனையை நெருங்க முடியாத RRR

click me!