திருமண விஷயத்தில் அப்பா கார்த்திக்கின் ஆசையை சுக்குநூறாக்கிய கெளதம்..! அதுக்குன்னு இப்படியா செய்யுறது..!

First Published Dec 2, 2022, 1:16 PM IST

நடிகர் கெளதம் கார்த்திக் தன்னுடைய திருமண விஷயத்தில் அவருடைய அப்பா கார்த்திக்யின் ஆசையை நிராசையாக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமாவில், 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் கார்த்திக். ரசிகர்களால் அன்புடன் நவரச நாயகன் என அழைக்கப்படும் இவர், இயக்குனர் பாரதி ராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டை பெற்றவர்.

இதை தொடர்ந்து, காலத்தால் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகன் கௌதமுக்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் கடந்த வாரம் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

பிக்பாஸ் ஜிபி முத்துவை சரமாரியாக பிளேடில் வெட்டிய சகோதரர்! 175 தையல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இதை தொடர்ந்து இருவரும் கடந்த சில வருடங்களாக டேட் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், ஒருவழியாக... வெளிப்படையாக காதலை அறிவித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்திலும் இணைந்துள்ளனர்.

மிக பிரமாண்டமாக இவர்களின் திருமணம் நடந்த நிலையில்... திருமணத்திற்கு பல பிரபலங்கள், மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து திரையுலகினர் ஆச்சர்யப்படும் படி, மகனின் திருமணத்தை நடத்த வேண்டும் என கார்த்திக் முடிவு செய்திருந்தாராம்.

37 வயதில் 'சந்திரலேகா' சீரியல் நடிகைக்கு ஜோடி கிடைச்சாச்சு.! வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வேதா!

ஆனால், கெளதம் வெறும் 250 பத்திரிக்கைகள் மட்டுமே அடித்து மிக முக்கிய பிரபலங்களை மட்டும் அழைத்தால் போதும் என முடிவு செய்து, தன்னுடைய முடிவை தந்தையிடம் கூறியது மட்டும் இன்றி... அவருக்கும் ஒரு பத்திரிகை கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் மகன் திருமணத்தை, மிகவும் பிரமாண்டமாக செய்து பார்க்க வேண்டும் என எண்ணிய கார்த்தியின் ஆசை நிராசை ஆனது குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதே போல் கெளதம் - மஞ்சிமா திருமணம் கார்த்தியின் குடும்ப வழக்கப்படி நடைபெறாமல் கேரள முறைப்படி நடந்ததிலும் அவருக்கு சிறு வருத்தம் என கூறப்படுகிறது.

450 ஆண்டு பழமைவாய்ந்த அரண்மனையில் ஆரம்பமானது ஹன்சிகாவின் கல்யாண கொண்டாட்டம்

click me!