தமிழ் சினிமாவில், 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் கார்த்திக். ரசிகர்களால் அன்புடன் நவரச நாயகன் என அழைக்கப்படும் இவர், இயக்குனர் பாரதி ராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டை பெற்றவர்.
26
இதை தொடர்ந்து, காலத்தால் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகன் கௌதமுக்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் கடந்த வாரம் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இதை தொடர்ந்து இருவரும் கடந்த சில வருடங்களாக டேட் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், ஒருவழியாக... வெளிப்படையாக காதலை அறிவித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்திலும் இணைந்துள்ளனர்.
46
மிக பிரமாண்டமாக இவர்களின் திருமணம் நடந்த நிலையில்... திருமணத்திற்கு பல பிரபலங்கள், மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து திரையுலகினர் ஆச்சர்யப்படும் படி, மகனின் திருமணத்தை நடத்த வேண்டும் என கார்த்திக் முடிவு செய்திருந்தாராம்.
ஆனால், கெளதம் வெறும் 250 பத்திரிக்கைகள் மட்டுமே அடித்து மிக முக்கிய பிரபலங்களை மட்டும் அழைத்தால் போதும் என முடிவு செய்து, தன்னுடைய முடிவை தந்தையிடம் கூறியது மட்டும் இன்றி... அவருக்கும் ஒரு பத்திரிகை கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
66
மேலும் மகன் திருமணத்தை, மிகவும் பிரமாண்டமாக செய்து பார்க்க வேண்டும் என எண்ணிய கார்த்தியின் ஆசை நிராசை ஆனது குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதே போல் கெளதம் - மஞ்சிமா திருமணம் கார்த்தியின் குடும்ப வழக்கப்படி நடைபெறாமல் கேரள முறைப்படி நடந்ததிலும் அவருக்கு சிறு வருத்தம் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.