சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு வருடத்தின் கடைசி மாதமும் அதிக அளவிலான படங்கள் ரிலீசாவது வழக்கம். அந்த வகையில் இந்த 2022-ம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த ஆண்டு இந்த மாதம் ஏராளமான தமிழ் படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இதற்கு காரணம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே விஜய் அஜித் என இருபெரும் நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
அதன்படி டிசம்பர் முதல் வாரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி, விஜய் சேதுபதி போலீஸாக நடித்திருக்கும் டிஎஸ்பி மற்றும் நயன்தாராவின் கோல்டு ஆகிய திரைப்படம் ரிலீசாகி உள்ளன. இதுதவிர எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள வதந்தி என்கிற வெப் தொடரும் இன்று நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது.