நடிகை துஷாரா விஜயன் நடிப்பு, 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை குவித்ததை தொடர்ந்து, மீண்டும் இரண்டாவது முறையாக பா.ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்து நேற்று வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' படத்திலும் தொடர்ந்து பாராட்டுக்களை குவித்து வருகிறது.
இந்தப் படத்திற்கு பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் மத்தியில் சில நெகட்டிவ் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் துஷாரா விஜயன் கூடுதல் பொறுப்புடன் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிகள் பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டு நேரடியாகவே சில எடக்கு மொடக்கான கேள்விகளை நடிகை துஷாரா விஜயனிடம் கேட்க அதற்க்கு பக்கா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அர்ஜுன் கதாபாத்திரம் மற்றும் வில்லன் வைக்கும் கேள்விகளுக்கான பதில்கள் எங்கே? என்று பயில்வான் கேட்க... இதற்க்கு பதிலளித்த துஷாரா விஜயன், எங்கள் கருத்தை இந்த படத்தின் மூலம் நாங்கள் முன் வைக்கிறோம், யாரும் எங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என பதிலடி கொடுத்தார்.