aishwarya rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தனது கணவரின் நாயகனாக வைத்து 3 என்னும் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதோடு சில ஆல்பம் சாங்குகளையும் இயக்கியுள்ளார்.முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதல் கரம் பிடித்திருந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
aishwarya rajinikanth
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்வதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார். 18 வருட காதல் வந்ததை இருவரும் முறித்துக் கொண்டனர். அறிவிப்பை தொடர்ந்து கொரோனா மற்றும் உடல் பாதிப்புகள் காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வந்த ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
மேலும் செய்திகளுக்கு... தடாலடி ஓப்பனிங்கை பெற்ற சீயான் விக்ரம்...கோப்ரா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்த அவரது குடும்பத்தினர் பல முயற்சிகள் செய்தும் எதுவும் வேலைக்காகவில்லை. இதை அடுத்து இருவரும் தங்களது பிள்ளைகளுக்கு மட்டும் பெற்றோராக இருக்கும் முடிவிற்கு வந்துள்ளனர்.
aishwarya rajinikanth
பின்னர் மூத்த மகன் யாத்ரா தனது பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்றதற்காக அவரது பள்ளிக்கு தந்தை தனுஷ் மற்றும் தாய் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் வருகை தந்திருந்தனர். அந்த புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலானது.
aishwarya rajinikanth
இந்நிலைகள் நேற்று கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியை ஓட்டி தனது மகன்களுடன் கணபதி தரிசித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா அதில் யாத்ரா மற்றும் லிங்காவிற்கு கொழுக்கட்டை ஊட்டி விடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதை கண்ட ரசிகர்கள் உங்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகட்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.