இயக்குனர் எஸ்.ஏ.சி தனது பிறந்தநாளை தனது மனைவி சோபா உடன் கேட் வெட்டி கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், இதற்கும் விஜய் வரவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ விஜய்யின் போட்டோ பின்னணியில் இருப்பதை பார்த்து ஆறுதல் அடைந்து வருகின்றனர். பிரச்சனையெல்லாம் மறந்து நடிகர் விஜய் மீண்டும் அவரது தந்தையுடன் பேச வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.