90களில் தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் சுவலட்சுமி. கொல்கத்தாவை சேர்ந்த இவர், பெங்காலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவரை தமிழில் ஆசை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது இயக்குனர் வசந்த் தான். இதைத்தொடர்ந்து கோகுலத்தில் சீதை, கல்கி, காத்திருந்த காதல், பொன் மனம், என் ஆச ராசாவே, மாயி, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நதி கரையினிலே படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு ஸ்பெஷல் விருதையும் பெற்றார்.