Anjali Nair : மறுமணம் ஆன ஐந்தே மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த அண்ணாத்த பட நடிகை - ஷாக் ஆன ரசிகர்கள்

Published : Jul 26, 2022, 08:23 AM IST

Anjali Nair : மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அஜித் ராஜு என்பவரை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டார் அஞ்சலி நாயர்.

PREV
15
Anjali Nair : மறுமணம் ஆன ஐந்தே மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த அண்ணாத்த பட நடிகை - ஷாக் ஆன ரசிகர்கள்

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை ரேகா நாயர், தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நெல்லு படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து கோலிவுட்டில் கோட்டி, உன்னையே காதலிப்பேன் போன்ற படங்களில் நடித்த இவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் மீண்டும் மலையாள படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.

25

அங்கு ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் எந்த வேடம் கொடுத்தாலும் நடித்து அசத்திய அஞ்சலி நாயருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. இவருக்கு மலையாளத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது த்ரிஷ்யம் 2 தான். ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் ரகசிய போலீஸாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அஞ்சலி நாயர்.

35

இதன்பின் இவருக்கு தமிழிலும் பட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சிவா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி சீனு இராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியின் அண்மையில் ரிலீசான மாமனிதன் படத்திலும் நடித்து அசத்தி இருந்தார் அஞ்சலி நாயர்.

இதையும் படியுங்கள்... Anjali Nair marriage : ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ‘அண்ணாத்த’ பட நடிகை... உதவி இயக்குனரை மணந்தார்

45

நடிகை அஞ்சலி நாயர் கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்கிற டைரக்டரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த நடிகை ரேகா நாயர் கடந்த பிப்ரவரி மாதம் 2-வது திருமணம் செய்துகொண்டார்.

55

இவர் மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அஜித் ராஜு என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 5 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது நடிகை அஞ்சலி நாயருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இதன்மூலம் நடிகை அஞ்சலி நாயர், அஜித் ராஜுவை 2-வது திருமணம் செய்துகொள்ளும் முன்னரே கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்...   Kalaga thalaivan : ‘கலகத் தலைவன்’ ஆனார் உதயநிதி ஸ்டாலின்... மோஷன் போஸ்டருடன் வெளியான புதிய அறிவிப்பு

click me!

Recommended Stories