அப்பாவை விட வயதில் மூத்த வில்லன் நடிகருக்கு 4-வது மனைவியான அஞ்சு..! ஒரே வருடத்தில் பிறந்தது ஏன்?

First Published Sep 8, 2022, 11:59 AM IST

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பின்னர், ஹீரோயினாக மாறிய அஞ்சு... தன் தந்தையை வயதில் மூத்த நடிகரை திருமணம் செய்தது ஏன் என்றும், பின்னர் அவரை பிரிய என்ன காரணம் என்பதையும் தற்போது முதல் முறையாக, பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 

'உதிரி பூக்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஞ்சு, பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் மிக சிறிய வயதிலேயே ஹீரோயினாக மாறியவர். தமிழை தொடர்ந்து, பல  மலையாள திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 

அதே போல் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1988 ஆம் ஆண்டில் ருக்மிணி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருதை வென்றார்.

மேலும் செய்திகள்: கார்கில் போர் நினைவகத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய அஜித்! தீயாக பரவும் புகைப்படங்கள்!
 

இவர் மிக சிறிய வயதிலேயே தன்னுடைய தந்தையை விட, வயதில் மூத்த வில்லன் நடிகரும், கன்னட திரையுலகின் இயக்குனருமான டைகர் பிரபாகரை 1995 இல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன  ஒரே வருடத்தில் பிரிந்தார். 

4 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது, தன்னுடைய பெற்றோரிடமே வந்து சேர்ந்த அஞ்சு தற்போது வரை, பெற்றோர் பாதுகாப்பில் தான் உள்ளார். இவருக்கு அர்ஜுன் என்கிற மகன் ஒருவரும் உள்ளார்.

மேலும் செய்திகள்: செம்ம மாஸ்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' பட தீம் மியூசிக் வெளியானது!
 

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அஞ்சு தந்தையை விட வயதில் மூத்தவரை திருமணம் செய்தது ஏன்? அவரை பிரிவதற்கு என்ன காரணம் என்பது குறித்து பேசி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

டைகர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்ட போது தனக்கு 17 வயது தான் என்றும், அவர் மீது ஏற்பட்ட காதல் காரணமாகவே திருமணம் செய்து கொண்டேன். அப்போது அவருக்கு தன்னை விட, வயதில் மூத்த மூன்று பிள்ளைகள் இருப்பது தனக்கு தெரியாது, அவருக்கு நான் 4 ஆவது மனைவி தெரிய என வந்தது. தன்னை திருமணம் செய்து கொண்ட பிறகும் இன்னும் சில பெண்களுடன் அவருக்கு பழக்கம் இருந்ததால், அவரை விட்டு பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: உங்க கூட குழந்தை பெத்துக்கணும்.. No சொல்லவே கூடாது.. ரவீந்தரிடம் மஹாலட்சுமி போட்ட கண்டீஷன்! இது தான் காரணமாம்!
 

அவரை விட்டு நான் வரும் போது, நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தேன். பின்னர் சில வாரம் கழித்து அவரே தன்னை தேடி வந்து வாழ அழைத்தார். ஆனால் என்னால் வரமுடியாது என மறுத்துவிட்டேன். பின்னர் தன்னுடைய மகனுக்கு 2 வயது இருக்கும் போது, அவர் இறந்து விட்டதாக செய்தி மட்டும் வந்தது என தெரிவித்துள்ளார். டைகர் பிரபாகரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' படத்தில் மீனாவின் தாய்மாமனாக, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்சுவின் இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!