தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்ட தமிழ் பட நடிகை... தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதமும் சிக்கியது

First Published Oct 2, 2022, 11:16 AM IST

வாய்தா பட நடிகை தீபிகா கடந்த சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை செய்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகைகள் தற்கொலை செய்துகொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வாய்தா படத்தில் நடித்த இளம் நடிகை தீபிகா என்பவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை செய்துள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வந்தவர் அகான்ஷா மோகன். எம்பிஏ படித்துள்ள இவர், மாடலிங் துறையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மாடல் அழகியாக வலம் வந்துகொண்டிருந்தார். இதையடுத்து படிப்படியாக படங்களிலும் நடிக்கத்தொடங்கினார். கடந்த மாதம் வெளியான சியா என்கிற இந்தி படத்தில் இவர் ஹீரோயினாக நடித்தார். அதுமட்டுமின்றி 9 திருடர்கள் என்கிற தமிழ் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... அடுத்த படத்தில் சோழ மன்னராக அவதாரம் எடுக்க உள்ள தனுஷ்... பொன்னியின் செல்வன் நடிகர் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்

நடிகை அகான்ஷா மோகன், மும்பையின் உள்ள வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 2 நாட்களுக்கு ரூம் போட்டு தங்கி இருந்தார். இரண்டு நாட்களாக அவர் தங்கியிருந்த அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர். மாற்று சாவியை பயன்படுத்தி ரூமை திறந்து பார்த்தபோது நடிகை அகான்ஷா மோகன், தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்தார்.

இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறக்கும் முன் அவர் எழுதிய தற்கொலை கடிதமும் சிக்கியது. அதில் ‘என்னை மன்னித்துவிடுங்கள். நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி தேவை. எனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை. யாரையும் தொல்லை செய்யாதீங்க’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... இரண்டே நாளில் ரூ.150 கோடியை தாண்டிய வசூல்.... பாக்ஸ் ஆபிஸில் பண மழை பொழியும் பொன்னியின் செல்வன்

click me!