தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது நானே வருவேன் திரைப்படம் வெளியாகி உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வெளியானதால் இப்படத்தின் வசூலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவர் எந்த கேரக்டரில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் சோழ மன்னராக நடித்த பார்த்திபன், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளார்.