தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், 60 ஆண்டுகால முயற்சிக்கு பின் தற்போது வெற்றிகரமாக திரைவடிவம் கண்டுள்ளது. இதனை சாத்தியமாக்கி காட்டியது மணிரத்னம் தான். பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசானது.