அதாவது ஏற்கனவே பிரபல நடிகர் சூர்யாவை வைத்து "சூரரை போற்று" என்ற மாபெரும் வெற்றித் திரைப்படத்தை கொடுத்த சுதா கொங்கரா, "புறநானூறு" என்கின்ற திரைப்படத்தை மீண்டும் சூர்யாவை வைத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த சூழலில் அப்பிடத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில், தற்போது அப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இது குறித்த அதிகார பூர்வ தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் முதல் முறையாக பிரபல தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீ லீலா இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும் அவருடைய சகோதரராக இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் முரளியின் மகனும் சிறந்த தமிழ் திரை உலக நடிகருமான அதர்வா முரளி நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலில் அதர்வா கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"துணை முதல்வர் உதயநிதிக்கு பாராட்டு விழா" ஆர்.கே. செல்வமணி வெளியிட்ட கலக்கல் தகவல்!