இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மாமல்லபுரத்தில் நேற்று துவங்கிய இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.