பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு இன்னும் இரு வாரங்களே உள்ளதால், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளன. அதன்படி தஞ்சையில் உள்ள பெரிய கோவிலில் இருந்து புரமோஷனை தொடங்க உள்ளார்களாம்.
இதற்கு அழைப்பு விடுக்கும் விதமாக, ஆதித்த கரிகாலனாக மாறி நடிகர் விக்ரம் போட்ட டுவிட்டில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டுத்திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா என பதிவிட்டு கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி ஆகியோரை டேக் செய்திருந்தார் விக்ரம்.
இதையும் படியுங்கள்... Viral Video: இவரை சந்திக்க வேண்டும்.. ஆனால் எப்படி..? கியூட் பேபியின் வீடியோ வெளியிட்டு உருகும் ராஷ்மிகா!