பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நம்ம ஊரை விட்டுக்கொடுப்பதா? கடுப்பான சென்னை வாசிகள் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு

First Published Sep 14, 2022, 2:18 PM IST

தற்போது மீண்டும்  ராஜு  இது போன்ற வார்த்தைகளை கூறி மன்னிப்பு கேட்டிருப்பது மேலும் சென்னைவாசிகளை கடுப்பேற்றியுள்ளது.

BB JODI 2

தென்னிந்திய மொழிகள் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஐந்தாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் ராஜூ ஜெயமோகன் முதல் பரிசை தட்டிச் சென்றார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் 2 என்கின்ற பெயரில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது விஜய் டிவி.

BB JODI 2

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக நாகர்ஜுனா, ராஜமௌலி, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அந்த ஷோவை ராஜூவும், பிரியங்கவும் தொகுத்து வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் கலகலப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தொகுப்பாளரான ராஜூ ஜெயமோகன் ரன்பீருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்.

மேலும் செய்திகளுக்கு...வடிவேலுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ..முக்கிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் வட்டார மொழிகளை கற்றுக் கொடுத்தார். அதில் சென்னை மொழியை கற்றுக் கொடுக்கும் போது இவர் நகைசுவை என நினைத்து செய்த காரியம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. 

BB JODI 2

இதனால் சென்னை வட்டார வழக்க இழிவுபடுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எங்களிடம் நல்ல வார்த்தைகள் எவ்வளவோ உண்டு. அவற்றை விட்டுவிட்டு சண்டையில் பயன்படுத்தும் வார்த்தைகளை ஏன் பாலிவுட் நடிகருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என சென்னை வாசிகள் கொந்தளித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...40 களை கடந்தும் கட்டுக்கடங்காத கவர்ச்சி..கண்களை கூச வைக்கும் கிரண்

BB JODI 2

இந்த பிரச்சனையால்  நெட்டிசன்களிடன் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார் ராஜூ ஜெயமோகன். சோசியல் மீடியாவில் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த பிரச்சினையை புரிந்து கொண்ட ராஜூவும் நகைச்சுவையாக செய்தது தவறாக மாறியதற்கு வருந்துகிறேன். யாரும் இரிட்டேட் ஆகவேண்டாம் என மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...‘வாரிசு’ 100-வது நாள் ஷூட்டிங் ஸ்பெஷல்... ஸ்டைலிஷ் விஜய்யுடன் ஸ்மைலிங் ராஷ்மிகா எடுத்த கியூட் செல்பி வைரல்

ஏற்கனவே அந்த காணொளிகள் சென்னை மக்கள் எப்போதும் இரிடேட்டாக இருப்பார்கள் என்று சொல்லியதுதான் மிகப்பெரிய குற்றமாகிவிட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் இது போன்ற வார்த்தைகளை கூறி  மன்னிப்பு கேட்டிருப்பது மேலும் சென்னைவாசிகளை கடுப்பேற்றியுள்ளது.

click me!