தேசிய விருது நடிகர், பாபி சிம்ஹா இன்று தன்னுடைய 38 -ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், காலை முதலே ரசிகர்கள் பலர் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா' திரைப்படம் தான். இந்த படத்தில் அசால்ட் சேதுவாக இவர் செய்த அளப்பறைக்கு, தேசிய விருதே கிடைத்தது.
தமிழை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து... ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட இவர், தற்போது.. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், 'இந்தியன் 2' படத்தில் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.