வெளியே மசாஜ் சென்டர்.. உள்ளே மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. அறைகுறை ஆடையுடன் இளம்பெண்கள் மீட்பு..!

By vinoth kumarFirst Published Jul 19, 2021, 5:32 PM IST
Highlights

விசாரணையில் தங்களை திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். 

திருப்பூரில்  மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் தொழில் நடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி கூத்தம்பாளையம் ஜே.பி. நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் பலர் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் கூத்தம்பாளையத்தில் உள்ள அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது  வீட்டில் 45,25,29 வயதான 3 பெண்கள் இருந்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்களை திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். 

இதனையடுத்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விக்னேஷ், வசந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வீட்டில் விபசாரம் நடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து  அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மீட்கப்பட்ட 3 பெண்களையும்  போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

click me!