தந்தையைக் கொன்றவரை பழிக்கு பழி வாங்கிய மகன் … கோர்ட்டுக்குள் நீதிபதி முன்பு சுட்டுக் கொன்ற கொடூரம் !!

Selvanayagam P   | others
Published : Dec 18, 2019, 10:59 AM IST
தந்தையைக் கொன்றவரை பழிக்கு பழி வாங்கிய மகன் … கோர்ட்டுக்குள் நீதிபதி முன்பு சுட்டுக் கொன்ற கொடூரம் !!

சுருக்கம்

உத்தரபிரதேசத்தில் பழிக்கு பழியாக கொலை குற்றவாளியை கோர்ட்டு அறையில் நீதிபதி முன்பே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நஜிபாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹாஜி எஹ்சான், நிலத்தரகர். 6 மாதங்களுக்கு முன்பு இவரையும், அவரது மருமகனையும் ஒரு தகராறில் ஷாநவாஸ் என்பவர் ஜப்பார் என்ற கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்தார். 

ஷாநவாஸ், ஜப்பார் ஆகியோரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.குற்றவாளிகள் 2 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் எஹ்சானின் மகன் தந்தையை கொன்றவர்களை பழிவாங்க திட்டமிட்டார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் பாதுகாப்புடன் திகார் சிறையில் இருந்து பிஜ்னோரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்துவந்தனர். இதை அறிந்த எஹ்சானின் மகன் உள்பட 3 பேர் துப்பாக்கிகளுடன் கோர்ட்டுக்கு வந்தனர்.

பின்னர் கோர்ட்டு அறையில் மாஜிஸ்திரேட்டு கண் முன்பே குற்றவாளிகள் 2 பேரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே போலீசார் அவர்களை காப்பாற்ற பாய்ந்து சென்றனர். இதில் ஷாநவாஸ் அந்த இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார். மற்றொரு குற்றவாளி ஜப்பார் மற்றும் 2 போலீசார் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!