அடத்தூ.. பக்கத்து வீட்டு பெண்ணை கூட்டி வந்து கணவனுக்கு விருந்து வைத்த மனைவி.. உடலுறவை வீடியோ எடுத்து கொடூரம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 19, 2022, 3:44 PM IST
Highlights

பக்கத்து வீட்டு பெண்ணை வீட்டுக்குள் அழைத்து கணவன் உடலுறவில் ஈடுபட்ட நிலையில் அதை அவரது மனைவி வீடியோ எடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்த  கொடுமை நடந்துள்ளது. 

பக்கத்து வீட்டு பெண்ணை வீட்டுக்குள் அழைத்து கணவன் உடலுறவில் ஈடுபட்ட நிலையில் அதை அவரது மனைவி வீடியோ எடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்த  கொடுமை நடந்துள்ளது. இந்நிலையில் போலீசார் அத்தம்பதியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இந்த வரிசையில் பக்கத்து வீட்டு பெண்ணை வீட்டிற்குள் அழைத்து வந்து அந்தப் பெண்ணை கணவன் பாலியல் வன்கொடுமை செய்ததை மனைவி வீடியோ எடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 

இதையும் படியுங்கள்: மெரினாவை போராட்ட களமாக்க பயங்கர திட்டம்.. ஏராளமான போலீசார் குவிப்பு.. 4 மாணவர்கள் அதிரடி கைது.

முழு விவரம் பின்வருமாறு:-  உத்தரபிரதேச மாநிலம் படவுனில் ஸ்பைஸ் கஞ்ச்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களது வீட்டுக்கு அருகில் ஒரு இளம் பெண் உள்ளார். இரு குடும்பத்தாரும் நன்கு பழக்கமானவர்கள் என்பதால் அடிக்கடி அந்தப் பெண் இத்தம்பதியர் வீட்டிற்கு வந்து சென்றார். இந்நிலையில் அந்த இளம் பெண் மீது கணவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அந்தப் இளம் பெண்ணை எப்படியாவது அடையவேண்டும் என திட்டமிட்டார், தனது விருப்பம் குறித்து தனது மனைவியிடம் அவர் கூறினார்,

இந்நிலையில் மனைவியுடன் சேர்ந்து அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்தப் பெண்ணை படுக்கை அறையில் தள்ளி கதவை தாழிட்டனர், பின்னர் கணவர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார், இதை அருகில் இருந்த அவரது மனைவி ரசித்து வீடியோ எடுத்தார்.

இதையும் படியுங்கள்: பெற்றோரை உதறிவிட்டு கார் டிரைவருடன் ஓடிய சாப்ட்வேர் இன்ஜினியர் நேர்ந்த கதி... நடு வீட்டில் தற்கொலை.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார், எவ்வளவோ கதறியும் யாருக்கும் கேட்கவில்லை, இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம் என தம்பதியர் மிரட்டினர். அவர்கள் சொன்னது போலவே இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அவர்கள் வெளியிட்டனர்.

இந்நிலையில்  தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அந்த பெண் வீட்டில் முடங்கினார். அந்தப் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது,  ஒரு கட்டத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்தப் பெண் தனது பெற்றோரிடம்  கூறி கதறி அழுதார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது இதனையடுத்து போலீஸார் கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர். 
 

click me!