நாயின் உதவியோடு தெருத்தெருவாக காரை தேடும் யோகி பாபு!

By manimegalai aFirst Published Feb 22, 2019, 12:27 PM IST
Highlights

யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவில், முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்த்துள்ளார். மேலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும்,  'தர்மபிரபு' 'கூர்க்கா',ஜாம்பி' ஆகிய 3 படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
 

யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவில், முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்த்துள்ளார். மேலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும்,  'தர்மபிரபு' 'கூர்க்கா',ஜாம்பி' ஆகிய 3 படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், யோகி பாபுவை வைத்து 'கூர்க்கா' படத்தை இயக்கி வரும் சாம் ஆண்டான்,  இப்படத்தை பற்றி கூறுகையில்...

"சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பபை குறுகிய காலத்திலேயே முடித்துள்ளோம். இதற்கான பாராட்டுகள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் செய்த அயராத உழைப்புக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய இவர், இந்த படத்தில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா மற்றும் அணைத்து நடிகர்களும், நடிகைகளும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளனர். இந்த படம் கோடை விருந்தாக வெளியாக உள்ளது. 

நகைச்சுவை மற்றும் அதிரடி கலந்த படமாக 'கூர்க்கா' தயாராகி உள்ளது. கடத்தப்பட்ட ஒரு காரை அப்பாவி கூர்க்கா தனது நாய் உதவியுடன், ஊர் ஊராக, தெருத்தெருவாக, அலைந்து எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது கதை.

படத்தை நான் இயக்குவதோடு  என் நண்பர்களுடன் இணைந்து '4 மங்கீஸ்' ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்துள்ளேன். ராஜ் ஆர்யன் இசையமைக்க கிருஷ்னன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.  

click me!