
நாடோடிகள் 2, காதல் கண்கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோவை ஆகும். இவர் கோவையில் உள்ள வடவள்ளி, மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூபாய் 2 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாகக் கூறப்படுகிறது.
கண்ட இடத்தில் கை வைத்த காமுகன்; பைக்கில் இருந்து கீழே குதித்து தப்பிய மூதாட்டி
இதை அடுத்து தாய் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்து பாளையத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் காவல்துறையின் தொடர் விசாரணையில் செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 1500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டையும் மீட்பதற்காக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.