ராணாவின் தம்பி அபிராம் டகுபாட்டி திருநங்கைகளை கூட விட்டு வைக்க மாட்டார் என தெலுங்கு திரையுலக முக்கியப் புள்ளிகள் தன்னோடு உடலுறவு கொண்ட புகைப்படங்களை ஸ்ரீலீக்ஸ் என்ற டேக் போட்ட நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீ ரெட்டி பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்றும் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து அணங்கு வந்த போலீசார் அவரை சமாதானபடுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் முன்னணி செய்தி தொலைக் காட்சியில் பேட்டியளித்த நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். தெலுங்கு திரையுலகை ஆளும் தயாரிப்பாளர் அவர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த தயாரிப்பாளரின் மகன் என்னை யூஸ் பண்ணிக் கொண்டார். அவர் என்னை யூஸ் பண்ணிய ஸ்டுடியோ அரசுக்கு சொந்தமானது. அந்த நபரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி. என்னை ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்ற தயாரிப்பாளரின் மகனின் லீலை புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன். அது தான் என் பிரம்மாஸ்திரம் என்று தெரிவித்திருந்த ஸ்ரீ ரெட்டி.
மேலும் பேசிய ஸ்ரீ ரெட்டி தயாரிப்பாளரின் மகன் அழைத்ததால் ஸ்டுடியோவுக்கு சென்றேன். நான் பேசுவதற்காக மட்டுமே ஸ்டுடியோவுக்கு சென்றேன். ஆனால் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட நான் இல்லை என்று அதிர்வலையை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி.
அடுத்ததாக அபிராம் பற்றி ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அபிராம் செக்ஸுக்கு அடிமை. அவரால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது, அபிராம் எந்த அளவுக்கு செக்ஸ் அடிமை என்றால் திருநங்கைகளை கூட அவர் விட்டு வைக்க மாட்டார் என்று பெரிய குண்டாக தூக்கிப் போட்டுள்ளார். நான் வாய் திறக்காமல் இருக்க சில பெரிய ஆட்களை அனுப்பி சமாதானம் செய்யப் பார்த்தார்கள் ஆனால் நான் சம்மதிக்கவில்லை. தேஜா தன் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க வந்தது எல்லாம் நாடகம் எனத் தெரியும் இதனால் நான் எதற்கும் மசியவில்லை என ஸ்ரீ ரெட்டி கூறினார்.