எனக்கு வயசு 18… அவர் என்கிட்ட வந்தாரு.. இறுக்கி கட்டிப் பிடிச்சாரு… முத்தம் கொடுத்தாரு..நான்பயந்து ஓடிட்டேன்… கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார் …

By Selvanayagam PFirst Published Oct 9, 2018, 6:36 AM IST
Highlights

கவிஞர் வைரமுத்து மீது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் செக்ஸ் குற்றச்சாட்டு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சில நிமிடங்களில் அதை நீக்கியுள்ளார். ஆனால் ஏராளமானோர் இதை ஸ்கீரீன் ஷாட் எடுத்து ரீடுவிட் செய்து வருவதால் அது வைரலாகி வருகிறது.

இந்தியாவில் இப்போது #MeToo இயக்கம் மிகத் தீவிரமாகிவிட்டது. இப்போது டிவீட்டரில் மேய்ந்து பார்த்தால் பாதிக்குப் பாதியான குற்றச்சாட்டுக்கள் மீடியா மற்றும் சினிமா துறையில் இருக்கும் ஆண்கள் மீதே பாய்ந்திருக்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைளில் பணியாற்றும் நிர்வாக ஆசிரியர்கள் லெவலுக்கு குற்றச்சாட்டுக்கள் பெரிய அளவில் இருக்கின்றன. இது போன்று தற்போது கவிஞூர் வைரமுத்து மீதும் ஒரு புகார் கிளம்பியிருக்கிறது

தமிழ் திரையுலகைப் பொருத்தவரை கவிஞர் என்றால் இது வைரமுத்துதான். சூப்பர் ஸ்டார்களான ரஜினி , கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் எல்லாத் தங்களது படங்களுக்கு பாடல் எழுத வைரமுத்துவைத்தான் நாடுவார்கள்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நெருக்கமானவர் என்பதால் தமிழ் திரையுலகினர் வைரமுத்து மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இந்நிலையில்தான் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் வைரமுத்து மீது செக்ஸ் புகார் ஒன்றை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தியாமேனன் என்ற அந்த பெண் பத்திரிகையாளர் தனக்கு வைரமுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டுவீட் செய்துள்ளார். தான் இளவயதில் வைரமுத்துவுடன் பணியாற்றியபோது ஒரு நாள் அவர் தன் அருகில் வந்த கட்டி அணைத்தாகவும், பின்னர் முத்தமிட்டதாகவும், எனக்கு என்ன செய்வதென்றே தெரியாததால் அங்கிருந்து ஓடிவந்து விட்டதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

எனக்கு  வைரமுத்து  மீதும் அவருடைய எழுத்தின்மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்ததாகவும், ஆனால் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அந்த டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார். 

அந்த டுவீட்டை அவர் சில நிமிடங்களில் டெலிட் செய்துவிட்டாலும் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தவர்கள் அதை வைரலாக்கி வருவதால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது

மேலும் இந்த டுவீட்டை பாடகி சின்மயி ரீடுவீட் செய்துள்ளார். இந்த தகவலை ஒருசிலர் நம்பவில்லை எனினும் இது நடந்தது உண்மை என சின்மயி தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறி  தமிழகமே கொந்தளித்து குறிப்பிடத்தக்கது.

click me!