ரசிகர்கள் பலர் தங்களுக்கு பிடித்த பிரபலங்களுக்கு எதாவது நடந்தால் அதை தாங்கிக்கொள்ளவே மாட்டார்கள்.
அதிலும் அந்த நாயகி எதாவது தனக்கு நடந்துவிட்டதாக கூறி, ட்விட்டரில் கூறி இருந்தால் என்ன நடந்தது, எப்படி நடந்தது என பாசமழையை பொழிந்து தள்ளிவிடுவார்கள்.
அப்படி டுவிட்டரில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர் நடிகை ராய் லக்ஷமி. இவர் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய கையில் காயம் ஏற்பட்டு விட்டதாக ஒரு புகைப்படத்தை த டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதோடு பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை, லேசான காயம் தான் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் பலர் அன்போடு லட்சுமிராயை விசாரித்து வருகின்றனர்....