இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்! பா.ரஞ்சித்துக்கு எச்சரிக்கை விடுத்த கருணாஸ்!

By manimegalai aFirst Published Jun 12, 2019, 4:13 PM IST
Highlights

கும்பகோணம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான, பா.ரஞ்சித் "ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதாகவும்,  ஆனால் அவரது காலத்தை பொற்காலம் என்கிறார்கள் என விமர்சித்து பேசினார்".
 

கும்பகோணம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான, பா.ரஞ்சித் "ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதாகவும்,  ஆனால் அவரது காலத்தை பொற்காலம் என்கிறார்கள் என விமர்சித்து பேசினார்".

மேலும் ஜாதிக் கொடுமைகள் அதிகம் நிகழ்த்தப்பட்டது தஞ்சை மாவட்டத்தில் தான் என்றும், ராஜராஜ சோழன் ஆட்சி காலம் இருண்ட காலம் என்று இவர் கூறியதற்கு, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில் பா.ரஞ்சித்துக்கு எதிராக பிரபல நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளார்.  

 ‘எங்கள் நிலங்களை பறித்தார்! பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்! பெண்களை வேசியாக்கினார்! இப்படி வரலாறு தெரியாத கட்டுக்கதைகளெல்லாம் உங்கள் தேவைகளுக்கு ஓர் மாபெறும் இன வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்!

உங்களை போல் முன்னோரின் வரலாற்றை கற்காமல் கதைவிடாதீர்கள். இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம்! தமிழர் மரபின் உச்சம்! நீங்களும் இந்த தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள்! அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியை போல் எதிர்வரிசையில் நின்று கொக்கரிக்காதீர்! தமிழர் முன்னோர்களின் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! இது அறிவுரை கலந்த எச்சரிக்கை! என கூறியுள்ளார் கருணாஸ்.

click me!