பிறந்த நாள் கொண்டாடிய மறுதினம் மாரடைப்பால் மரணமடைந்த பிரபலம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

By manimegalai aFirst Published Oct 2, 2018, 1:29 PM IST
Highlights

மனிதர்களின் வாழ்க்கை நிலை இல்லாத ஒன்று என நமக்கு தெரிந்தாலும், எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்கள் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மட்டுமே இருக்கிறது.

மனிதர்களின் வாழ்க்கை நிலை இல்லாத ஒன்று என நமக்கு தெரிந்தாலும், எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்கள் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மட்டுமே இருக்கிறது.

அந்த வகையில், முதல் நாள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பிறந்த நாள் விழாவை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி விட்டு, மறுதினம் அவர் இறந்தால், அது யூகிக்க கூட முடியாத அதிர்ச்சியாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலை இயக்குனரான பாலா என்ற பால முருகன் மாரடைப்பால் திடீர் என உயிரிழந்துள்ளார். நெய்வேலியைச் சேர்ந்த பாலா சென்னையில் மனைவி, குழந்தையுடன் இருந்துள்ளார். கடந்த 29ம் தேதி அவர் 42வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

இதில் சோகம் என்னவென்றால் பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாள் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!