நிலம் வாங்கினால் இந்த ஊரில் தான் வாங்கணும்...மக்கள் அதிகம் விரும்பும் டாப் 3 நகரங்கள்

வீடு, நிலம் வாங்குவது என்பது முதலீடு என்பதை தாண்டி கெளரவம், செல்வாக்கு தொடர்பான விஷயமாக மாறி விட்டது. அதிலும் சில குறிப்பிட்ட ஊர்களில் நிலம் வாங்க தான் அதிகமான மக்கள் ஆசைப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. மக்களின் மனம் கவர்ந்த அந்த டாப் 3 நகரங்கள் பற்றியும், அங்கு அப்படி என்ன ஸ்பெஷல் உள்ளதை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


தற்போது இந்தியாவில் நில முதலீடு என்பது வெறும் சொத்துக்களைப் பற்றியது அல்ல . அது எதிர்காலத்தின் பொருளாதார பாதுகாப்பை நோக்கி எடுத்து வடக்கும் முதல் அடி எனக் கருதப்படுகிறது. இதனால் அதிகமான மக்கள் பெரு நகரங்களில் நிலம் வாங்குவதையே அதிகம் விரும்புகிறார்கள். குறிப்பாக, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நிலம் வாங்க வேண்டும் என்பதை பெரும்பாலான மக்கள் தங்களின் கனவாகவே வைத்துள்ளார்கள்.

பெங்களூரு :

Latest Videos

முக்கிய பகுதி: 

- சர்ஜாபூர் – IT கம்பனிகள், ஸ்கூல்கள், ஹைடெக் பிராஜெக்டுகள் மேடான நிலம், நல்ல சாலை வசதி 
- நெல்லம்மங்கலா, ஐயப்பனஹள்ளி, ஹெச்சரே – குறைந்த விலையில் வளரும் இடங்கள் ஆகிய இடங்கள் சர்ஜாபூரை பெங்களூரு நகரின் மிக முக்கியமான நகரமாக மாற்றி விட்டது. 

ஏன் மக்கள் விரும்புகிறார்கள்?

- பெரும் IT பூங்காக்களின் அருகாமையில் இருப்பது. 
- Outer Ring Road-இல் சுலபமாக இணைக்கும் வசதி, பசுமையான சூழல், வசதியான அடுக்குமாடி குடியிருப்புகள். 
- பஸ்கள், மெட்ரோ மற்றும் புதிய கட்டுமான திட்டங்கள்


முதலீட்டுப் பார்வை:


பெங்களூரு ரியல் எஸ்டேட் சந்தையில் வருடத்திற்கு சராசரியாக 8% - 12% வரையிலான மதிப்பேற்றம் காணப்படுகிறது. சில பகுதிகளில் 20% வரை வளர்ச்சி கண்டுள்ளன.

சென்னை :

முக்கிய பகுதிகள்:

- ஓ.எம்.ஆர். (OMR) ஐடி நிறுவனங்கள் நிரம்பிய பகுதி
- வேளச்சேரி, மெடவாக்கம், பெருங்களத்தூர் – பழமையானது மற்றும் புதிய வசதிகள் கொண்டவை
- அவரம்பாக்கம், மாம்பாக்கம், பள்ளிக்கரணை – இயற்கையுடன் இருக்கும் நகர சூழல்

ஏன் மக்கள் விரும்புகிறார்கள்?

- கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வர்த்தக வளாகங்கள், சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் வசதி ஆகியவை மிக அருகிலேயே இருப்பது. 
- IT மற்றும் தொழில் வளர்ச்சி காரணமாக வேலை வாய்ப்புகள் அதிகம் 
- கடற்கரை அருகாமையில் அமைந்த சிறந்த இடங்கள் இவை.
 
முதலீட்டுப் பார்வை:

சென்னையின் தெற்குப் பகுதிகள், குறிப்பாக OMR மற்றும் பக்கவாட்டுகள் 10% வரை ஆண்டு வளர்ச்சி பெறுகின்றன. சென்னை-செங்கல்பட்டு வழியில் நில விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

ஹைதராபாத் :

முக்கிய பகுதிகள்:

- கோக்காபேட் (Kokapet) – பொருளாதார மாவட்டம் அருகாமையில் இருப்பது
- நானாக்ராம் குட்டா, அடியபட், மனிகொண்டா – IT ஹப்புகள்
- ஷமீர் பேட், பாடுர், ஜஹீராபாத் – குறைந்த முதலீட்டில் அதிக வளர்ச்சி போன்றவை.

ஏன் மக்கள் விரும்புகிறார்கள்?

- பல்வேறு MNC கம்பெனிகள் உள்ள இடங்கள்
- சீரான நகராட்சி திட்டமிடல் (HMDA approval)
- ஃபிளாட், வில்லா, மற்றும் பிளாட் முதலீடுகளுக்கான அதிக வாய்ப்பு Rajiv Gandhi International Airport அருகாமை

முதலீட்டுப் பார்வை:

ஹைதராபாத்தில் ரியல் எஸ்டேட் துறை மிக வேகமாக வளர்கிறது. 15% - 18% வளர்ச்சி சில பகுதிகளில் காணப்படுகிறது. பொதுவாக நிலம் வாங்கும் இடங்களில் "HMDA" மற்றும் "RERA" அனுமதிகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன.

யாருக்குப் பொருத்தமானது?

- வேலைவாய்ப்பு பார்வையில் நிலம் வாங்க நினைப்பவர்களுக்கு ஹைதராபாத் ஏற்ற ஊர்.
- குடும்பம், கல்வி வசதி உள்ளிட்ட விஷயங்களை நினைப்பவர்கள் சென்னையில் நிலம் வாங்கலாம்.
- முழுமையான சூழலோடு முதலீடு தேடுபவர்கள் பெங்களூரு நகரை தேர்வு செய்யலாம்.

நிலம் என்பது ஒரு வாழ்வாதாரத் தீர்வாகவே பார்க்கப்படுகிறது. இன்று வாங்கும் பசுமை நிலம், நாளைய சொத்துக் கையெழுத்தாக மாறும். ஒவ்வொரு நகரமும் தனக்கென வலிமையுள்ள இடங்களை கொண்டுள்ளது. உங்கள் வாழ்க்கை முறை, முதலீட்டு நோக்கம், எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றைப் பொறுத்து நகரங்களையும் பகுதிகளையும் தேர்வு செய்வதே மிகுந்த முக்கியம்.

click me!