எடுத்த சபதம் நிறைவேறாமல் காலணி அணிந்து கொண்ட அண்ணாமலை!

Published : Apr 12, 2025, 10:02 PM IST

Annamalai put on footwear before fulfilling the vow : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க 3 மாதங்களுக்கு பிறகு அண்ணாமலை காலணி அணிந்து கொண்டார்.

PREV
15
எடுத்த சபதம் நிறைவேறாமல் காலணி அணிந்து கொண்ட அண்ணாமலை!
Annamalai Wear Footwear

Annamalai put on footwear before fulfilling the vow :தமிழக அரசியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக கட்சி இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதுஒரு புறம் இருந்தாலும் தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

25
Annamalai Wear Footwear

இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநில தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அண்ணாமலை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

35
Annamalai Wear Footwear

இந்த நிலையில் தான் தமிழக பாஜக மாநில புதிய தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் தனது முதல் செயல்பாடாக அண்ணாமலைக்காக புதிய காலணியை கொடுத்து அவரை அணியச் செய்துள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். அது உறுதி. ஆதலால், அண்ணாமலையை காலணி அணிய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன்படி அவரது கோரிக்கையையும் ஏற்று அண்ணாமலையும் காலணி அணிந்து கொண்டார்.

45
Annamalai Wear Footwear

இதுதான் இப்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், திமுக அரசியை விரட்டியடிக்கும் வரையில் தான் காலில் காலணி அணியமாட்டேன் என்று சபதம் எடுத்திருந்தார். சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வன்மையாக கண்டித்த அண்ணாமலை அப்போது தனது வீட்டு முன்பு 6 முறை சாட்டையடி போராட்டம் நடத்தினார். மேலும், திமுக ஆட்சியை விரட்டியடிக்கும் வரையில் தான் காலில் காலணி அணியமாட்டேன் என்று சபதம் எடுத்தார்.

55
Annamalai Wear Footwear

ஆனால், இன்னும் திமுக அரசி ஆட்சியில் இருக்கும் நிலையில் அண்ணாமலை தனது சபதத்தை நிறைவேற்றாத நிலையில் எப்படி காலில் காலணி அணிந்து கொண்டார் என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு புதிதாக தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன் தான் காரணமாக சொல்லப்படுகிறது. அவரது வேண்டுகோளுக்கிணங்க தான் அண்ணாமலை காலில் காலணி அணிந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories