Lok Sabha Election 2024 Live: நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

Lok Sabha election 2024 Tamil Nadu latest news and live updates in tamil sgb

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, விளவங்கோடு  சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

8:57 PM IST

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு தகவல்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

 

7:34 PM IST

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 வாக்கு சதவிகிதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவு. கள்ளக்குறிச்சிக்கு அடுத்தபடியாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 75.44%, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 74.87 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

7:31 PM IST

Loksabha election 2024 பரந்தூர், வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை பரந்தூர், வேங்கைவயல் மக்கள் புறக்கணித்துள்ளனர்

 

7:12 PM IST

மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்: இவிஎம் இயந்திரங்களுக்கு தீ வைப்பு!

மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

6:27 PM IST

நிறைவடைந்தது முதற்கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குப்பதிவு!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது

 

5:20 PM IST

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: 101 வயதில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமா!

இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என 101 வயதில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமா தெரிவித்துள்ளார்

 

4:56 PM IST

அயோத்தி ராமர் கோயில்: அன்சாரி குடும்பத்துக்கு மோடி புகழாரம்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திய அன்சாரி குடும்பம் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்

 

4:30 PM IST

கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!

கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

 

3:50 PM IST

மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும்: வி.கே.சசிகலா!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்

 

12:55 PM IST

இபிஎஸ் எங்கு இருக்காரே தெரியல.. இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும்.. ஓ.பன்னீர் செல்வம் சரவெடி!

2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என தேனி பெரியகுளத்தில் வாக்களித்த பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

12:42 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான தளபதி விஜய் வாக்களித்தார்

12:09 PM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்களித்தார்

சென்னை வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்களித்தார்.

12:05 PM IST

முதல் ஆளாக வந்து வாக்களித்தார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

12:00 PM IST

தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 24.37%

தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 24.37%  பதிவாகியுள்ளது. அதிகபட்ச கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதமும், குறைந்தபட்ச மத்திய சென்னையில் 20.09 சதவீதமும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

11:55 AM IST

மனைவியுடன் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் சீமான்

11:43 AM IST

மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வாக்களித்தார்

11:35 AM IST

இயக்குனர் ஹரி தன் மனைவி ப்ரீத்தா உடன் வந்து வாக்களித்தார்

11:25 AM IST

கவிஞர் வைரமுத்து, ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்

11:01 AM IST

மக்களவை தேர்தலில் வாக்களித்தார் இயக்குனர் தங்கர்பச்சான்

10:56 AM IST

பேமிலியோடு வந்து வாக்களித்தார் தயாநிதி மாறன்

10:54 AM IST

இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும்... ஓ.பன்னீர் செல்வம்

இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும், எடப்பாடி பழனிசாமி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. 2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என தேனி பெரியகுளத்தில் வாக்களித்த பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார். 

10:42 AM IST

பென்ஸ் காரில் வந்து வாக்களித்தார் நடிகர் தனுஷ்

10:08 AM IST

நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற வல்லவர்களை, நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியமான நாள்- எடப்பாடி பழனிசாமி

 இன்றைய தேர்தலில் புதிய தலைமுறை வாக்காளர்கள் இளைஞர்கள், பெண்கள், தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடதை ஆற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்

 

10:08 AM IST

Lok Sabha Election : வாக்களிக்க சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்கள் இத்தனை லட்சம் பேரா.? வெளியான லிஸ்ட்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு பேருந்துகளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 
 

10:07 AM IST

Lok Sabha Election : வாக்களிக்க சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்கள் இத்தனை லட்சம் பேரா.? வெளியான லிஸ்ட்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு பேருந்துகளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 
 

10:07 AM IST

Lok Sabha Election : 9 மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குப்பதிவு.! எந்த தொகுதியில் அதிக வாக்குப்பதிவு தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 

10:02 AM IST

இதை மட்டும் நிரூபிச்சிட்டீங்கன்னா அரசியலை விட்டே விலகுகிறேன்.. அண்ணாமலை அதிரடி சரவெடி!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை: இந்த தேர்தல் ஒளிவு மறைவின்றி, நேர்மையாக நடத்தி இருக்கிறோம். திமுகவினர் பணத்தை வைத்து கோவையை வென்று விடலாம் என நினைக்கிறார்கள். 

 

10:01 AM IST

வாக்குச் சாவடியில் ஏசியாநெட் தமிழ் நேரலை!!

10:00 AM IST

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வாக்களித்தார்

9:57 AM IST

முதல் முறை வாக்காளர்களுக்கு தென் சென்னை வேட்பாளர் தமிழிசை அழைப்பு!!

9:53 AM IST

மக்களவை தேர்தலில் வாக்களித்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண்

9:48 AM IST

சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!!

9:47 AM IST

கணவருடன் வந்து வாக்களித்தார் நடிகை நமீதா

9:36 AM IST

மனைவியுடன் வந்து வாக்களித்தார் நடிகர் பிரபு

9:33 AM IST

ஜோதிமணி பெரிய திருமங்கலம் பள்ளியில் வாக்களித்தார்

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பெரிய திருமங்கலம் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

9:28 AM IST

சத்குரு வாக்களித்தார்!!

9:28 AM IST

பாஜக பணம் கொடுத்ததாக தெரிவித்தால், அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன் - அண்ணாமலை

9:24 AM IST

முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு!!

9:15 AM IST

ஒரே நேரத்தில் வாக்களிக்க வந்த விஜய பிரபாகரன் மற்றும் தமிழிசை செளந்தரராஜன்

9:11 AM IST

நடிகை குஷ்பு கணவர் சுந்தர் சி-யுடன் வந்து வாக்களித்தார்!!

9:10 AM IST

ஜனநாயக கடமையாற்றினார் இசைஞானி இளையராஜா

9:08 AM IST

நடிகர் சேதுபதி வாக்களித்தார்!!

9:07 AM IST

மக்களவை தேர்தலில் வாக்களித்தார் நடிகர் விஜய்சேதுபதி

9:07 AM IST

கோவை காந்திபுரத்தில் வாக்களித்தார் வானதி சீனிவாசன்

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை காந்திபுரத்தில் வாக்களித்தார்.

9:05 AM IST

கடலூர் மக்களவை தொகுதி.. 10 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு

 கடலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக ஒரு மணிநேரமாக வாக்குப்பதிவு தொடங்கவில்லை.  கடலூர் வேணுகோபாலபுரம் பள்ளியில் 2 மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவந்தும் வேலை செய்யவில்லை. இதனால், வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் வரிசையில் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். 

9:05 AM IST

கடலூர் மக்களவை தொகுதி.. 10 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு

 கடலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக ஒரு மணிநேரமாக வாக்குப்பதிவு தொடங்கவில்லை.  கடலூர் வேணுகோபாலபுரம் பள்ளியில் 2 மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவந்தும் வேலை செய்யவில்லை. இதனால், வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் வரிசையில் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். 

9:02 AM IST

குடும்பத்தோடு வந்து வாக்களித்தார் நடிகை குஷ்பு

8:55 AM IST

இயக்குனர் வெற்றிமாறன் வாக்களித்தார்

மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் இயக்குனர் வெற்றிமாறன்

8:55 AM IST

பாஜக தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்!!

8:51 AM IST

நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்!!

8:50 AM IST

நடிகர் கார்த்திக் வாக்களித்தார்!!

8:50 AM IST

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்களித்தார்!!

8:49 AM IST

இயக்குனர் லிங்குசாமி வாக்களித்தார்!!

8:47 AM IST

திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸ் வாக்குப்பதிவு

திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவு செய்தார் 
 

8:46 AM IST

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்களித்தார்!!

மனைவியோடு வந்து வாக்களித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்#MKStalin #CMStalin #LokSabhaElection2024 #LokSabhaElections2024 #ElectionsWithAsianetNewsTamil #tamilnaduelection #ParliamentElection2024 #Vote pic.twitter.com/LcoaDtGoOX

8:34 AM IST

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்குப்பதிவு

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், கொளத்தூர் பெரியார் நகர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

8:20 AM IST

வாக்குச்சவாடியில் யதார்த்தமாக சந்தித்துக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தமிழிசை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் யதார்த்தமாக சந்தித்துக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன். இருவரும் தங்களது  வாழ்த்தினை பரிமாறிக்கொண்டனர். 

8:18 AM IST

கே. பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் வாக்கு பதிவு செய்தார்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் வாக்கு பதிவு செய்தார்.

8:10 AM IST

தேர்தலில் இன்று களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்.? முன்னாள் முதலமைச்சர்கள்,ஆளுநர், மத்திய அமைச்சர்கள் யார்?

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ள நிலையில், இன்றைய தேர்தலில் 3 முன்னாள் முதலமைச்சர்கள், 8 மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுநர் ஒருவரும் களம் இறங்குகின்றனர். 
 

8:09 AM IST

Lok Sabha Election: இன்றைய வாக்குப்பதிவு சாதனையை எட்டனும்.. ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது-மோடி

இன்று தேர்தல் நடைபெறவுள்ள 102 தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 

8:04 AM IST

சென்னை திருவான்மியூரில் வாக்களித்தார் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா

விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

8:01 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.

7:58 AM IST

பாஜக தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்!!

கரூர் அரவக்குறிச்சியில் பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை வாக்களித்தார்.

7:50 AM IST

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார்

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார்.

7:47 AM IST

நடிகர் கவுதம் கார்த்திக் வாக்களித்தார்.

நடிகர் கவுதம் கார்த்திக் வாக்களித்தார்.

7:45 AM IST

தமிழிசை சவுந்தரராஜன் விரும்கம்பாக்கத்தில் வாக்குப்பதிவு

தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் விரும்கம்பாக்கத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

7:45 AM IST

வாக்குப்பதிவு செய்த நடிகர் அஜித்குமார்!!

7:31 AM IST

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்களித்தார்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

7:29 AM IST

சேலம் சிலுவம்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்

 சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட கண்டனூர் வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

7:19 AM IST

தருமபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணி வாக்குப் பதிவு !!

திண்டிவனத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச் சாவடி மையத்தில் தருமபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணி வாக்குப் பதிவு செய்தார். இதே வாக்குச் சாவடி மையத்தில் பாமக தலைவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்குப் பதிவு செய்ய இருக்கின்றனர்.

7:17 AM IST

ஈபிஎஸ் வாக்குப்பதிவு!!

சிலுவம்பாளையம் வாக்குச் சாவடிக்கு நடந்து வந்து குடும்பத்திருனருடன் வந்திருந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குப் பதிவு செய்தார். 

7:11 AM IST

அனைவரும் வாக்களிக்க பிரதமர் எக்ஸ் தளத்தில் தமிழில் அழைப்பு!!

7:11 AM IST

முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல் ஆளாக சென்னை திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் வாக்களித்தார்.

7:06 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 

6:59 AM IST

வாக்குச்சாவடி மையத்தின் அருகில் கட்சியின் சின்னமோ, பெயரோ இருக்க கூடாது

எந்தவொரு வேட்பாளரும் வாகனத்திலோ அல்லது அவருக்கென அனுமதிக்கப்பட்ட வாகனத்திலோ வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தாலோ, வாக்குச் சாவடியிலிருந்து அழைத்து சென்றாலோ மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஊழல் குற்றமாகும். அவர்கள் பாக்கெட்டுகளில் கட்சியின் சின்னமோ, பெயரோ இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6:48 AM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கயுள்ளது. அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

6:44 AM IST

போதிய பேருந்துகள் இல்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் போராட்டம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என கூறி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பில் 3000-சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது போதிய அளவில் பேருந்துகள் இல்லை என கூறி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

6:38 AM IST

நைட்டோடு நைட்டாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்.. ஐஜேகே-வினரை சுத்துப்போட்ட தேர்தல் பறக்கும் படை!

திருச்சி அருகே  வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த ஐஜேகே-வினரை தேர்தல் பறக்கும் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த பணம்,  கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

12:57 AM IST

வீரப்பன் மகள் போட்டியிடும் தொகுதி

கிருஷ்ணகிரி தொகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா வீரப்பன் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களம் காண்கிறார். முன்பு பாஜகவில் இருந்தவர் இப்போது நாம் தமிழர் கட்சியில் சேர்ந்துள்ளார். கடலூரில் எழுத்தாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் பாமக சார்பில் போட்டியிடுகிறார்.

பெரம்பலூரில் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். திருச்சியில் மதிமுக சார்பில் மூத்த தலைவர் வைகோவின் மகன் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கிறார்.

12:50 AM IST

வாக்குச்சாவடியில் வரிசை நிலை அறியும் வசதி

மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:44 AM IST

பூத் சிலிப் இருந்தால் மட்டும் போதுமா?

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப் இல்லாதவர்கள் அரசால் அங்கீகரிப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:43 AM IST

பேருந்துகளில் கட்டணம் இன்றி  பயணம் செய்யலாம்

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்குச் செல்ல நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி  பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12:41 AM IST

திருவள்ளூர் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி!

தூத்துக்குடி தொகுதியில் சிட்டிங் எம்பி கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். திமுக கோட்டையான சென்னையில் தயாநிதி மாறன் (தென் சென்னை), கலாநிதி வீராசாமி (வட சென்னை) ஆகிய சிட்டிங் எம்.பி.க்கள் மீண்டும் களம் காண்கின்றனர்.

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கரூரில் காங்கிரஸ் சிட்டிங் எம்.பி. ஜோதிமணிக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் சிபிஐ சார்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் மீண்டும் வேட்பாளராக நிற்கிறார்.

12:34 AM IST

ஐந்து ஓபிஎஸ் வேட்பாளர்களின் தொகுதி!

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் போட்டியிடுகிறார்கள்.

விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் களம் காண்கிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிட்டிங் எம்பியான மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார்.

12:31 AM IST

நட்சத்திர வேட்பாளர்கள்

நீலகிரியில் திமுகவின் சிட்டிங் எம்.பி. ஆ.ராசாவை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அண்மையில் மாநிலங்களவை உறுப்பினரான நிலையில் மக்களவைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் சிட்டிங் எம்.பி.யுமான விஜய் வசந்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

நெல்லையில் பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வு.மான நயினார் நாகேந்திரன் களம் காண்கிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக இருக்கிறார். தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். அன்புமணி ராமதாஸ் மனைவியான இவர் சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்பட்டவர்.

12:24 AM IST

கோவை, தேனி நட்சத்திர வேட்பாளர்கள்

கோவை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், கட்சி அவரை கோவை வேட்பாளராக அறிவித்துவிட்டது. இவரை எதிர்த்து அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன், திமுகவின் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தேனியில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவரது முன்னாள் சகாவான தங்க தமிழ்ச்செல்வன் அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

12:20 AM IST

பாதுகாப்புப் பணியில் 19 துணை ராணுவ படையினர்

தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்காகவும், அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் மையங்களில் 1,500 துணை ராணுவப் படையினர் காவலில் ஈடுபட உள்ளனர்.

12:17 AM IST

விழுப்புரம், சிதம்பரம் நட்சத்திர வேட்பாளர்கள்

விழுப்புரம் தொகுதியில் எழுத்தாளரும் தற்போதைய எம்பியுமான ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரான திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியத்தை எதிர்த்து நிற்கிறார்.

சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் களம் காண்கிறார். 2019 தேர்தலில் திருமா மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை ரவிக்குமாரும் பானை சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கின்றனர்.

12:13 AM IST

தென் சென்னை நட்சத்திர வேட்பாளர்கள்

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் தெலுங்கானா ஆளுநராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக சார்பில் போட்டிடுகிறார். அவர் 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியவர்.

இப்போது தென் சென்னையில் திமுகவின் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்துக் களம் காண்கிறார். எழுத்தாளரான தமிழச்சி தங்கபாண்டியன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களை எதிர்த்து அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் அதிமுக வேட்பாளராக இருக்கிறார்.

12:09 AM IST

ரூ.4650 கோடி பறிமுதல்

முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூ.4,650 கோடிக்கு மேல் மதிக்கத்தக்க நகை, பணம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த அளவுக்குப் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

12:08 AM IST

7 கட்டங்களாக நடக்கும் தேர்தல்

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தொடங்கிய கட்சிகளின் பிரச்சாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. 7 கட்டங்களாக நடைபெறும் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

12:07 AM IST

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல்

முதல் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் உள்ள 92 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

12:07 AM IST

வாக்குப்பதிவு நேரம்

வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 1625 வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்க 16.63 கோடி வாக்காளர்கள் தயாராக உள்ளனர். இந்தத் தேர்தலுக்காக 1.87 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 18 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். 

12:06 AM IST

2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடக்கம்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.

8:57 PM IST:

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

 

7:34 PM IST:

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 வாக்கு சதவிகிதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவு. கள்ளக்குறிச்சிக்கு அடுத்தபடியாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 75.44%, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 74.87 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

7:31 PM IST:

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை பரந்தூர், வேங்கைவயல் மக்கள் புறக்கணித்துள்ளனர்

 

7:12 PM IST:

மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

6:27 PM IST:

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது

 

5:20 PM IST:

இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என 101 வயதில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமா தெரிவித்துள்ளார்

 

4:56 PM IST:

அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திய அன்சாரி குடும்பம் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்

 

4:30 PM IST:

கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

 

3:50 PM IST:

மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்

 

12:55 PM IST:

2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என தேனி பெரியகுளத்தில் வாக்களித்த பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

12:42 PM IST:

12:09 PM IST:

சென்னை வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்களித்தார்.

12:05 PM IST:

12:00 PM IST:

தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 24.37%  பதிவாகியுள்ளது. அதிகபட்ச கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதமும், குறைந்தபட்ச மத்திய சென்னையில் 20.09 சதவீதமும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

11:56 AM IST:

11:43 AM IST:

11:35 AM IST:

11:25 AM IST:

11:01 AM IST:

10:56 AM IST:

10:54 AM IST:

இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும், எடப்பாடி பழனிசாமி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. 2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என தேனி பெரியகுளத்தில் வாக்களித்த பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார். 

10:42 AM IST:

10:08 AM IST:

 இன்றைய தேர்தலில் புதிய தலைமுறை வாக்காளர்கள் இளைஞர்கள், பெண்கள், தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடதை ஆற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்

 

10:08 AM IST:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு பேருந்துகளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 
 

10:08 AM IST:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு பேருந்துகளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 
 

10:07 AM IST:

நாடாளுமன்ற தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 

10:02 AM IST:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை: இந்த தேர்தல் ஒளிவு மறைவின்றி, நேர்மையாக நடத்தி இருக்கிறோம். திமுகவினர் பணத்தை வைத்து கோவையை வென்று விடலாம் என நினைக்கிறார்கள். 

 

10:01 AM IST:

10:00 AM IST:

9:58 AM IST:

9:53 AM IST:

9:48 AM IST:

9:47 AM IST:

9:36 AM IST:

9:33 AM IST:

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பெரிய திருமங்கலம் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

9:28 AM IST:

9:28 AM IST:

9:24 AM IST:

9:15 AM IST:

9:11 AM IST:

9:10 AM IST:

9:08 AM IST:

9:07 AM IST:

9:07 AM IST:

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை காந்திபுரத்தில் வாக்களித்தார்.

9:05 AM IST:

 கடலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக ஒரு மணிநேரமாக வாக்குப்பதிவு தொடங்கவில்லை.  கடலூர் வேணுகோபாலபுரம் பள்ளியில் 2 மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவந்தும் வேலை செய்யவில்லை. இதனால், வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் வரிசையில் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். 

9:05 AM IST:

 கடலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக ஒரு மணிநேரமாக வாக்குப்பதிவு தொடங்கவில்லை.  கடலூர் வேணுகோபாலபுரம் பள்ளியில் 2 மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவந்தும் வேலை செய்யவில்லை. இதனால், வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் வரிசையில் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். 

9:02 AM IST:

8:55 AM IST:

மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் இயக்குனர் வெற்றிமாறன்

8:55 AM IST:

8:51 AM IST:

8:50 AM IST:

8:50 AM IST:

8:49 AM IST:

8:47 AM IST:

திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவு செய்தார் 
 

8:47 AM IST:

மனைவியோடு வந்து வாக்களித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்#MKStalin #CMStalin #LokSabhaElection2024 #LokSabhaElections2024 #ElectionsWithAsianetNewsTamil #tamilnaduelection #ParliamentElection2024 #Vote pic.twitter.com/LcoaDtGoOX

8:34 AM IST:

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், கொளத்தூர் பெரியார் நகர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

8:20 AM IST:

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் யதார்த்தமாக சந்தித்துக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன். இருவரும் தங்களது  வாழ்த்தினை பரிமாறிக்கொண்டனர். 

8:18 AM IST:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் வாக்கு பதிவு செய்தார்.

8:10 AM IST:

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ள நிலையில், இன்றைய தேர்தலில் 3 முன்னாள் முதலமைச்சர்கள், 8 மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுநர் ஒருவரும் களம் இறங்குகின்றனர். 
 

8:09 AM IST:

இன்று தேர்தல் நடைபெறவுள்ள 102 தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 

8:04 AM IST:

விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

8:01 AM IST:

7:58 AM IST:

கரூர் அரவக்குறிச்சியில் பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை வாக்களித்தார்.

7:50 AM IST:

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார்.

7:47 AM IST:

நடிகர் கவுதம் கார்த்திக் வாக்களித்தார்.

7:45 AM IST:

தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் விரும்கம்பாக்கத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

8:13 AM IST:

7:31 AM IST:

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

7:29 AM IST:

 சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட கண்டனூர் வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

7:19 AM IST:

திண்டிவனத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச் சாவடி மையத்தில் தருமபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணி வாக்குப் பதிவு செய்தார். இதே வாக்குச் சாவடி மையத்தில் பாமக தலைவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்குப் பதிவு செய்ய இருக்கின்றனர்.

7:26 AM IST:

சிலுவம்பாளையம் வாக்குச் சாவடிக்கு நடந்து வந்து குடும்பத்திருனருடன் வந்திருந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குப் பதிவு செய்தார். 

7:21 AM IST:

7:23 AM IST:

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல் ஆளாக சென்னை திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் வாக்களித்தார்.

7:22 AM IST:

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 

6:59 AM IST:

எந்தவொரு வேட்பாளரும் வாகனத்திலோ அல்லது அவருக்கென அனுமதிக்கப்பட்ட வாகனத்திலோ வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தாலோ, வாக்குச் சாவடியிலிருந்து அழைத்து சென்றாலோ மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஊழல் குற்றமாகும். அவர்கள் பாக்கெட்டுகளில் கட்சியின் சின்னமோ, பெயரோ இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6:48 AM IST:

தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கயுள்ளது. அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

6:44 AM IST:

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என கூறி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பில் 3000-சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது போதிய அளவில் பேருந்துகள் இல்லை என கூறி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

6:38 AM IST:

திருச்சி அருகே  வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த ஐஜேகே-வினரை தேர்தல் பறக்கும் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த பணம்,  கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

12:57 AM IST:

கிருஷ்ணகிரி தொகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா வீரப்பன் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களம் காண்கிறார். முன்பு பாஜகவில் இருந்தவர் இப்போது நாம் தமிழர் கட்சியில் சேர்ந்துள்ளார். கடலூரில் எழுத்தாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் பாமக சார்பில் போட்டியிடுகிறார்.

பெரம்பலூரில் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். திருச்சியில் மதிமுக சார்பில் மூத்த தலைவர் வைகோவின் மகன் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கிறார்.

12:50 AM IST:

மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:47 AM IST:

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப் இல்லாதவர்கள் அரசால் அங்கீகரிப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:43 AM IST:

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்குச் செல்ல நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி  பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12:41 AM IST:

தூத்துக்குடி தொகுதியில் சிட்டிங் எம்பி கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். திமுக கோட்டையான சென்னையில் தயாநிதி மாறன் (தென் சென்னை), கலாநிதி வீராசாமி (வட சென்னை) ஆகிய சிட்டிங் எம்.பி.க்கள் மீண்டும் களம் காண்கின்றனர்.

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கரூரில் காங்கிரஸ் சிட்டிங் எம்.பி. ஜோதிமணிக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் சிபிஐ சார்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் மீண்டும் வேட்பாளராக நிற்கிறார்.

12:35 AM IST:

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் போட்டியிடுகிறார்கள்.

விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் களம் காண்கிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிட்டிங் எம்பியான மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார்.

12:31 AM IST:

நீலகிரியில் திமுகவின் சிட்டிங் எம்.பி. ஆ.ராசாவை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அண்மையில் மாநிலங்களவை உறுப்பினரான நிலையில் மக்களவைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் சிட்டிங் எம்.பி.யுமான விஜய் வசந்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

நெல்லையில் பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வு.மான நயினார் நாகேந்திரன் களம் காண்கிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக இருக்கிறார். தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். அன்புமணி ராமதாஸ் மனைவியான இவர் சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்பட்டவர்.

12:25 AM IST:

கோவை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், கட்சி அவரை கோவை வேட்பாளராக அறிவித்துவிட்டது. இவரை எதிர்த்து அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன், திமுகவின் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தேனியில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவரது முன்னாள் சகாவான தங்க தமிழ்ச்செல்வன் அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

12:20 AM IST:

தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்காகவும், அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் மையங்களில் 1,500 துணை ராணுவப் படையினர் காவலில் ஈடுபட உள்ளனர்.

12:17 AM IST:

விழுப்புரம் தொகுதியில் எழுத்தாளரும் தற்போதைய எம்பியுமான ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரான திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியத்தை எதிர்த்து நிற்கிறார்.

சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் களம் காண்கிறார். 2019 தேர்தலில் திருமா மட்டும் பானை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை ரவிக்குமாரும் பானை சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கின்றனர்.

12:13 AM IST:

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் தெலுங்கானா ஆளுநராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக சார்பில் போட்டிடுகிறார். அவர் 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியவர்.

இப்போது தென் சென்னையில் திமுகவின் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்துக் களம் காண்கிறார். எழுத்தாளரான தமிழச்சி தங்கபாண்டியன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களை எதிர்த்து அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் அதிமுக வேட்பாளராக இருக்கிறார்.

12:09 AM IST:

முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூ.4,650 கோடிக்கு மேல் மதிக்கத்தக்க நகை, பணம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த அளவுக்குப் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

12:08 AM IST:

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தொடங்கிய கட்சிகளின் பிரச்சாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. 7 கட்டங்களாக நடைபெறும் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

12:08 AM IST:

முதல் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் உள்ள 92 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

12:07 AM IST:

வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 1625 வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்க 16.63 கோடி வாக்காளர்கள் தயாராக உள்ளனர். இந்தத் தேர்தலுக்காக 1.87 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 18 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். 

12:06 AM IST:

2024 நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.