Asianet News TamilAsianet News Tamil

இஸ்ரேல் ஹமாஸ் போர்.. இன்னும் 40 சிங்கப்பூரர்கள் வெளியேறவில்லை - கோரிக்கை வைக்கும் அமைச்சர் பாலகிருஷ்ணன்!

Singapore News : நேற்று நவம்பர் 6ம் தேதி, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் பேசுகையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில், தங்கள் குடிமக்களை காக்க உதவியவர்களுக்கு நன்றி கூறினார். 

yet 40 Singaporeans must evacuate Israel Palestine region says Singapore EA ministry vivian balakrishnan ans
Author
First Published Nov 7, 2023, 7:34 AM IST

மேலும், அமைச்சர் விவியன் தனது ஏழு அம்ச உரையின் இறுதிப் பகுதியை பேசும்போது, சிங்கப்பூரர்களின் பாதுகாப்பு எப்போதும் வெளியுறவு அமைச்சகத்திற்கு முன்னுரிமை என்று கூறினார். சிங்கப்பூர் MFA அக்டோபர் 7, 2023 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் ஹமாஸின் தாக்குதலைக் கண்டித்ததும், இந்த சண்டையில் சிங்கப்பூரர்கள் யாரும் சிக்கியதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தது. 

ஆனால் அனைத்து சிங்கப்பூரர்களும் "பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் தங்கி தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் 17 முறை கத்தியால் குத்தி, காரை மேலே ஏற்றிக் கொன்ற கொடூரம்! தண்டனை என்ன தெரியுமா?

மேலும் கடந்த அக்டோபர் 10, 2023 அன்று, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சிங்கப்பூரர்களும் வணிக முறையில் கூடிய விரைவில் வெளியேற வேண்டும் என்று MFA ஒரு ஆலோசனையை வழங்கியது. இந்த அறிவுரை இருந்தபோதிலும், 40 சிங்கப்பூரர்கள் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியப் பகுதிகளில் தங்கியிருந்தனர்.

சிங்கப்பூர் MFA (Ministry of Foreign Affairs) அவர்களுடன் தொடர்பில் இருக்க தன்னால் இயன்றதைச் செய்து வருவதாகவும், ஆனால் 120 சிங்கப்பூரர்கள் MFAன் ஆலோசனையைப் பின்பற்றி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளை தரை மற்றும் வான் வழியாக கடந்து சென்றதாகவும் அமைச்சர் விவியன் தெரிவித்தார்.

சிலர், வணிக ரீதியாக வெளியேறினர், ஆனால் அவ்வாறு செய்ய முடியாத சிலர் மற்ற நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்யேக வெளியேற்ற விமானங்கள் மூலம் வெளியேற முடிந்தது. அப்படி சிங்கப்பூரர்களுக்கு உதவிய ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல் மற்றும் தென் கொரியா அரசுகளின் உதவிக்கு விவியன் நன்றி தெரிவித்தார்.

பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்தியர்களுக்கு உடனடி வேலை! இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை

இந்த இக்கட்டான சூழலிலும் ஒரு சிங்கப்பூரர், மீண்டும் அந்த பிராந்தியத்திற்குச் செல்கிறார் என்றும் விவியன் குறிப்பிட்டார், அவர் நவம்பர் 6 ஆம் தேதி மாலை கெய்ரோவுக்குப் புறப்பட்ட வெளியுறவுத்துறைக்கான இரண்டாவது மந்திரி மாலிகி ஒஸ்மான் ஆவார் என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ரஹ்மதன் லில் ஆலமின் அறக்கட்டளை (ஆர்எல்ஏஎஃப்) மூலம் சேகரிக்கப்படும் உதவிகளை "உறுதிப்படுத்துவதற்கு" மாலிகி அங்கிருந்து உதவுவார் என்று விவியன் கூறினார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios